Monday, December 24, 2007

தீபாவளியா? இல்லை இது தீராவலியா?

நரகாசூரன கொண்றானாம் பண்றி பொறந்த பையன்! மகா ஜனங்களே இந்த கதைய நல்லா கேட்டுக்கங்க। எங்கயாவது பண்றி நிலத்தோட புணர்ச்சி செய்து பராக்கிரமமான புள்ள பொறக்குமா? அட சாதாரன புள்ளதான் பொறக்குமாப்பா? சரி பொறந்துச்சுன்னே வச்சிக்குவோம். அப்படி பொறந்து ஒரு அசுரன்(திராவிடன் அல்லது தமிழன்) கொன்னுட்டா அதுக்காக இப்போ வாழுகிற மக்களெல்லாம் காச கரியாக்கனுமா? அந்த கரிய நாமே சுவாசிச்சு வாழ்வை கெடுத்துக்கனுமா? அட வயித்துல இருக்கிற புள்ளங்களையும் பொறக்குறதுக்கு முன்னாடியே பயமுறுத்தனுமா? நீ வெளியே வந்தா இதைவிட பெரிய வெடியாப்போடுவாங்கன்னு இப்பவே சொல்லனுமா? தமிழ் சமூகமே அசுரர்களானா நம் மூதாதையர்கள்ல வெல்லமுடியாத ஒருத்தரை கொலை செய்துவிட்டதா சொல்லி அதை கொண்டாடுகிற ஒரு செயலை நினைத்து நாம கொதிச்சு எழாம அதை நாமும் சேர்ந்து கொண்டாடுவது நம் வீட்டில் நடந்த சாவை கொண்டாடுவது போல் இல்லையா? எவனோ ஒரு கேனப்பையல் கதைகட்டினா நமக்கு எங்க போச்சு அறிவு? விவரமில்லாத சிறுபிள்ளைகளுக்கு நாம் எடுத்து சொல்லி புரியவைக்காமல், தலை தீபாவளி என மாமனார் தலையில் மிளகாய் அரைக்க கிளம்பிவிடுகிறார்கள் புதுமாப்பிள்ளைகள். ஏண்டா நரகாசூரன் செத்ததுக்கும் தலைதீபாவள்க்கும் என்னடா சம்பந்தம்? இதுக்கும் ஏதாவது காரணம் சொல்லுவானுங்க கிறுக்கு பசங்க. தமிழ் மக்களே பட்டாச சுட்டு போட்டு காச கரியாகாதீங்க முதல்ல இது குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி தாயரிக்கப்படும் பொருள். இரண்டாவது பொறுப்பே இல்லாம சுவாசக்காற்றை மாசுபடுத்தும் செயல் மட்டுமில்லாமல், ஒரே நாளில் எல்லாவற்றையும் சாப்பிட்டு உடலை கெடுக்கும் நாள். பல கர்ப்பினி பெண்களையும் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தையும் கெடுத்து வருங்கால சமூகத்துக்கு ஆப்பு வைக்குற பண்டிகை. நீங்க வக்கிற ஒவ்வொரு பட்டாசும் உங்க நலனுக்கு வக்கிற ஆப்பு என்பதை மறக்காமல் குறைந்தபட்சம் பட்டாசு இல்லாத நாளாக்குங்க நண்பர்களே!

1 comment:

Several tips said...

மிகவும் அருமை