Monday, December 24, 2007

தமிழ்நாடு தமிழருக்கே!

மொழிவாரி மாநிலங்களை பிரித்துக்கொண்டுவிட்டு, தமிழ்நாட்டில் தமிழர் அல்லாத பலர் வாழ்கிறார்கள். நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, ஆனால் உண்ட வீட்டிற்கே இரெண்டகம் செய்வதுபோல் சில பிற மொழி பேசும் பெரும்(?)புள்ளிகள் கெடுதல் செய்கிறார்கள். இவர்களுக்கு தமிழ் மொழி, தமிழ் இனப்பற்று என்பது துளியும் இல்லை. இவர்கள் தமிழ் இன பற்றாளர்கள் போல் நடித்து மக்களை ஏய்த்து சுகவாழ்வு தேடுவது, சொத்துக்கள் சேர்ப்பது, இது மட்டுமின்றி, தமிழ் இன அழிப்பிற்கான செயல்களை திட்டமிட்டு செய்தல். அதாவது கலாச்சார சீரழிவு, பிற மொழி கலப்பை ஊக்குவித்தல், காட்டி கொடுத்தல், கலகம் செய்தல், போன்ற எண்ணற்ற பொதுநலச் சீர்கேடுகளில் ஈடுபடுகின்றனர். தமிழர்கள் பொருளாதார ரீதியாக நசுக்கப்பட்டு, இப்பிறமொழி, பிறமாநில மக்களுக்கு அடிமையாகிவிட்டனர். இப்படி அரசியல், பொருளாதர மற்றும் சட்ட ரீதியாக தமிழர்கள் நசுக்கப்பட்டுள்ளனர். மொழி உணர்வு இல்லத பிற மாநிலத்தாரால், பல போராட்டங்கள் திசை திருப்பபட்டன, தமிழரின் புத்தி மழுங்கடிக்கப்பட்டன. எனவே, தமிழர் அல்லாதவர் தமிழ்நாட்டில் அசையா சொத்துக்கள் வாங்குவதை தடை செய்ய வேண்டும், இவர்களின் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழியாக வேண்டும், தமிழனே ஆளவேண்டும், தமிழ்நாடு தமிழரின் நாடாகவே இருக்கவேண்டும். தமிழா! ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுவதா? இருக்க இடம் கொடுத்தவன் மனைவியை கவர்தல் கண்டு வேடிக்கை பார்ப்பதா? தமிழா நீ தமிழனாய் தமிழ்நாட்டிலேயே இருக்கப்போகிறாயா? இல்லை இங்கேயே வந்தவனுக்கு ஏவல் செய்து உன் பிள்ளைக்கு பால் இல்லாவிட்டலும் கிழவனுக்கு பால் அபிசேகம் செய்து ஒழியப்போகிறாயா? இல்லை பரதேசம் சென்று பிச்சை எடுக்கப்போகிறாயா? இல்லை, இனி வாளெடுத்து கயமை கலைந்து, வேற்றுமை கலைந்து, தமிழனாய் தமிழை அரியனையேற்றி ஆள்ப்போகிறாயா? இனி ஒரு விதி செய்வோம்.

தமிழ்நாடு தமிழருக்கே! தமிழ்நாடு தமிழருக்கே! தமிழ்நாடு தமிழருக்கே!

No comments: