Sunday, December 30, 2007

முதலாளித்துவம் Vs மார்க்சியம்

தேசியம் முதலாளித்துவ சிந்தனை, குடும்பம் முதலாளித்துவ சிந்தனை அல்லது தனிமனித சொத்துசேர்ப்புக்கு குடும்பம் வழிவகுக்கிறது என்று மார்க்சியவாதிகள் கருதுகின்றனர். சரி அப்படியானால்

1. தேவைக்கு பொருளீட்டல் முதலாளித்துவ சிந்தனையல்லவா? பொருள் என்பதை இயற்கையின் விளைவு என்று கூறிவிடமுடியுமா? இயற்கையின் விளைச்சலுக்கு கூட உழைக்கவேண்டுமல்லவா?

2. எதற்க்காக சமதர்ம சமுதாயத்தை அமைக்கவேண்டும் என புரட்சியாளர்கள் கருதுகிறார்கள்? நாளைய உலகின் மக்களின் நியாயமான வாழ்விற்குதானே? புத்தகம் எதற்காக எழுதுகிறோம் நாளைய சமுதாயத்திற்கு வழிகாட்டத்தானே, நாளைய சமுதாயத்தின் மீது அக்கறைகொள்ளாவிட்டால் இன்றைய மக்கள் அழித்தது போக வெரும் கழிவுதானே மிஞ்சும் அப்படியானால் பின் வரும் சமுதாயத்திற்காக புத்தகம் எழுதுவதுகூட வீண் வேலையாகவும் நேர விரயமாக தோன்றும்.

3. குடும்பம் முதலாளித்துவ சிந்தனை என்று எடுத்துக்கொண்டால் திருமணமில்லை, குடும்பமில்லை, சொத்து சேர்ப்பதில்லை, விருப்பபட்டவரோடு இனைகிறோம், ஒத்துவராத போது பிரிகிறோம் யாரோ யாருடனோ வாழ்கிறோம், இறுதிக்காலத்தில் யாரை கூப்பிடுவது நோய்வாய்பட்டால், மருத்துவமணைக்கு போக இந்த உலகில் எங்கு காசில்லாமல் நேர்மையான சிகிச்சை கிடைக்கிறது சொல்லுங்கள்? மார்க்சியமே இன்னதென்று புரியாத உலகில் நாம் ஒரு பரந்த மனப்பாண்மையான சமூகத்தை கானமுடியுமா?

4. சமுத்துவ சமுதாயத்தின் கருத்தாக்கமே அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டுதலாகவும் பார்க்கப்படாவிட்டால் ஒவ்வொரு தலைமுறையிலும் தலைதூக்கும் ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு சமதர்ம தத்துவம் உருவாக்கப்படுமா? அப்படியானால் இந்த தலைமுறைக்கு மார்க்சியம் பொருந்தாதா?

5. தேசியம் முதலாளித்துவ சிந்தனை என்பதில் உண்மையில்லாமல் இல்லை, ஏனெனில் திட்டமிடல் என்றாலே முதலாளித்துவ உணர்வு வந்துவிடுகிறது. திட்டமிடல் இல்லாமல் தேசியம் இல்லை, திட்டமிடலிலேயே தனிமனித திறமை என்பதிலிருந்து தேசிய விளைச்சல் சக்தி, பாதுகாப்பு தேவை என்று எல்லாமே முதலாளித்துவ சிந்தனையாகிவிடுகிறதே.

6. தனிமனித சிந்தனை, திறமை என்பதில் தலைமை திறன் என்பது வரவில்லையா, அதில் ஆளுமை குறித்த எண்ணங்கள் இல்லையா?

7. அறிவியல் என்பது முதலாளித்துவ சமூகத்தின் விளைபொருளாக இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிடமுடியுமா? அப்படியானால் உன்பது உடுப்பது உறங்குவது என்றுமட்டுமல்லாமல் மனிதன் தன் ஆற்றலை பயன்படுத்தவதே மனிதனை மிருகங்களில் இருந்து வேறுபடுத்த முடியும். அப்படியில்லாவிட்டால் மனிதன் ஆயுதம் கண்டிருக்கமாட்டான், நெருப்பை கண்டிருக்கமாட்டான், அப்படியே கற்கால மனிதனாகவே வாழ்ந்திருப்பான். எனவே நாகரீக சமுதாயத்திற்கு பொருளீட்டல் அவசியமாகிறது, உழைப்பும், சிந்தனையும் பகுத்தறிவின் வெளிப்பாடாகவே இருக்கிறது.

8. உழைப்பவனுக்கே நிலவுடைமை என்கிறோம் ஆனால் உழைப்பவனிடத்திலும் உழைக்கும் சக்திக்கு மேல் நிலம் இருந்தால் அது சொத்தாகி ஆதிக்கத்திற்கும், பிரித்தாளும் எண்ணத்திற்கும் வழிவகை செய்கிறது.

9. பாலியல் கலாச்சாரம் என்பது கட்டுபாடற்றதாக இருக்கவேண்டும் என்பதே மார்க்சியத்தின் கருத்தாக இருக்கிறது, ஆனால் கட்டுப்பாடற்ற பாலியல் கொள்கையுள்ள மேலை நாடுகளில் அது ஒரு விலைபொருளாகவே இருக்கிறது அல்லது பொருள் இருப்பவரின் அடிமையாகிபோகிறது. இப்படி ஒரு விலைபொருளாக இருந்த சம்பவம் தமிழக மக்களை ஆண்டு பேயாட்டம் போட்டதை யாரும் மறுக்கமுடியுமா? இந்த நிலைதான் இன்று இந்தியா எங்கும் நிலவுகிறது. இனி நாளை குஷ்புவை போன்ற விபச்சாரிகள் நாடாளும் நிலை வரும். இன்றைக்கு விபச்சாரத்தை அனுமதித்தால் நாளை மார்க்சிய மாற்றம் வரும் என்பது ஒரு எதிர்பார்ப்புதான். அது எதிர்மறையானதாக கூட இருக்கலாம்.

முதலாளித்துவம் பெரும்பலத்துடன் உலகமயமாகி வருகிறது, மார்க்சியமோ யாராவது சுய ஆர்வத்தில் படித்து ஆயுதமேந்தி மார்க்சியத்தை உலகமயமாக்குவார்களா என்று ஏங்கும் சவலப்பிள்ளையாக இருக்கிறது. முதலாளித்துவதிற்கு மார்க்சியம் ஒரு சிறந்த மார்க்கம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இன்று வெற்றியுடன் வீறு நடைபோடுவது முதலாளித்துவம் தான், ஆனால் இறுதியாக வெல்லப்போவது மார்க்சியம் தான் ஏனெனில் முதலாளித்துவம் ஒரு சுய அழிப்பு கோட்பாடு, வேகமாய் வளர்ந்து தன்னை தானே அழித்துக்கொள்வது. முதலாளித்துவத்தால் இன்று வாழ்பவன் பலனடையலாம், நாளைய சந்ததி கொடிய நோய்முதல் பல்வேறு துண்பத்திற்கு ஆளாகும் என்பது உண்மை. ஆனால் மார்க்சியத்தை இன்று இருப்பவன் காதலிக்காவிட்டால் நாளை முதலாளித்துவமோ, மார்க்சியமோ இரண்டுமே இருக்காது, ஏனெனில் இன்று விகாரமாய் வளர்ந்து வரும் முதலாளித்துவத்தின் பின்விளைவுகள் மொத்த உலகத்தேயே அழித்துவிடும்

No comments: