Saturday, December 29, 2007

பட்டய படிப்புகளும் பகுத்தறிவும்

தமிழக பட்டதாரிகளே, எல்லோரும் பட்டம் வாங்கும் நாள் வெகுதூரமில்லை, ஆனால் அனைவருக்கும் வேலை கிடைக்குமா? சரி எல்லோருக்கும் சுயதொழில் தொடங்கும் திறன் இருக்கிறாதா இருந்தாலும் முதலீட்டுக்கு பணம் இருக்கிறதா? பட்டதாரிகளே பட்டப்படிப்பில் என்ன கற்றுக்கொடுத்தார்கள்? தொழில்நுட்ப பட்டப்படிப்பில் தொழில்நுட்பமும், அறிவியலில் அறிவியலும், கலை பட்டங்களில் கலைகல்வியும் கற்றுக்கொடுத்தார்கள். சரி இதையெல்லாம் வைத்து நீங்கள் ஏதாவது வயிற்று பிழைப்பு செய்யலாம். ஆனால் இது மட்டும் நாகரீக தனிமனித மற்றும் சமூக வாழ்விற்கு போதுமானதா? சட்டம் தெரியாமலும் தனிமனிதனின் உரிமைகளும் புரியாமால் ஒரு மனிதன் சுயமரியாதையவும் சுதந்திரமாகவும் வாழமுடியுமா? பார்பனர்களால் ஏற்படுத்தப்பட்ட சாதி, மதம், கடவுள்,புராணங்கள் ஆகிய புரட்டுகளிலிருந்து மக்கள் விடுபடாமல் மக்கள் சுயமரியாதையாகவும் சுதந்திரமாகவும் வாழமுடியுமா? இன்று ஒவ்வொருவரும் வாழ தன்னலமாக மேற்கொள்ளும் சூழ்ச்சிகளால் நானும் சூழ்ச்சி செய்தால்தான் வாழமுடியும் என கருதி தனிமனிதன் ஒவ்வொருவனும் சூழ்ச்சிகாரன் ஆகிவிட்டான், ஆக்கப்பட்டுவிட்டான். நடிகர்களாலும் கிரிக்கெட்டாலும் இளம் சமூகம் திசைதிருப்பபட்டு நாசமாகிகொண்டிருக்கிறார்கள். படித்த பட்டதாரிகள் எல்லாம் இந்த மாயைகள், மூடநம்பிக்கைகள், தன்னலபேய்குணம் இவற்றிலிருந்து விடுபடாமல் மக்கள் சுயமரியாதையாகவும் சுதந்திரமாகவும் வாழமுடியுமா? இந்த மாயைகள், மூடநம்பிக்கைகள், தன்னலபேய்குணங்களை ஒழிக்க அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கிறதா? ஏன் அரசை ஆளும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது பற்று இல்லை, அவர்களுக்கு நாட்டுபற்றும் இல்லை, பணப்பற்றுதான் உள்ளது. இந்த மக்களை பிரித்தாண்டு பணமும் சுகமும் சேர்க்கத்தானே மக்கள் மீது பல மாயைகளையும், மூடநம்பிக்கைகளையும் ஏவிவிட்டுயிருக்கிறார்கள். எனவே பட்டதாரி தோழர்களே நான் உங்களுக்கு சில தனிமனித பல்கலைகழகங்களை காட்டுகிறேன் அந்த புத்தகங்களை படியுங்கள் நீங்கள் வாழ்வில் ஒளியையும், என்றும் கானாத மறுமலர்ச்சியையும் காண்பீர்கள் நாமும் நாடும் சுயமரியாதையாகவும் சுதந்திரமாகவும் வாழலாம். அந்த பல்கலைகழகங்கள் யார் தெரியுமா தந்தை பெரியார், பாரதிதாசன், அம்பேத்கர், காரல் மார்க்ஸ், சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, பகத்சிங் இவர்களை படியுங்கள், வீரமும் விவேகமும் வரும் அதோடு பல நன்மை தீமைகளின் காரண காரியங்களை உணர்ந்து தொடர்புடைய புத்தகங்களை படித்து நீங்களே ஒரு பல்கலைகழகமாகிவிடுவீர்கள். ஒவ்வொரு மனிதனும் ஒரு பல்கலைகழகமானால் தமிழினமே உலகம் போற்றும் இனமாக விளங்கும். பட்டப்படிப்போடு பகுத்தறிவையும் கற்போம் மண்ணில் ஒரு அறிவு உலகத்தை அமைப்போம்.

ஆதிக்கவாதிகள் போற்றும் பொருளாதாரம்

ஆதிக்க படிப்புதான் MBA அதாவது வணிக நிர்வாகவியல், அல்லது பொதுவாக மேலாண்மை கல்வி, Principles of Management அதாவது மேலாண்மை தத்துவமே என்ன தெரியுமா? Get things done by others அதாவது மற்றவர்களிடம் வேலைவாங்குவதுதான், அதாவது தான் உழைக்காமல் மற்றவர்களிடம் உழைப்பை வாங்கி காரியத்தை சாதித்திக்கொள்வது. இந்த மேலாண்மை கல்வியில் ஒரு பாடம் தான் ECONOMICS என்ற பொருளியல், இந்த பொருளாதார கல்வியின் பெரும்பாண்மையான பொருளடக்கம் என்ன தெரியுமா? எப்படி தொழிலில் சிக்கனத்தை கடைபிடிப்பது, வருமாணத்தை பெருக்க எப்படி படிப்படியாய் நூல் மேல் நடந்து தொழிலை தக்கவைத்துகொள்வது என்பது தான். இந்த பொருளியல் வேறொன்றுமில்லை, கணக்கியல், புள்ளியல் போன்றவற்றின் நடைமுறை அளவுகோள்தான். இதை தொழில்முறையிலும் நிதியகங்களாலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முதலாளிகள் தங்கள் பொருளாதாரத்தை பெறுக்கிகொள்ள இந்த பொருளியல் உத்திகளை கவணமாக பின்பற்றுகிறார்கள். தொழிலாளிகளை கசக்கி பிழிந்து காசாக்க ஆப்பரேஷன்ஸ் மேனேஜ்மெண்ட் என்னும் நடைமுறை மேலாண்மையின் உத்திகளை மேற்கொண்டு முதலாளிக்கு குறைந்த செலவில் அதிக வருமாணம் ஈட்ட பெரும் பங்காற்றுகிறார்கள் MBA க்கள். இந்த பொருளியல் தத்துவத்தை நாம் தனிமனித வாழ்வில் பின்பற்றினால் நாம் சிக்கனமாக வாழலாம். இந்த பொருளியல் காரல் மார்க்சின் தாஸ் காப்பிடல் புத்தகத்தின் கம்யூனிச கொள்கைகளை அடியொற்றியே கானபடுகிறது. ஆனால் முதலாளி வர்க்கம் தனக்கு ஏற்றவாரு அமைத்துக்கொண்டு இந்த பொருளியல் தத்துவத்தை தன்னலத்திற்காகவும் தான் பொருளீட்டவும் மிக நேர்த்தியாக பயன்படுத்துகிறது. ஆனால் உலகெங்கும் சமுதாய பொருளியல் அறிஞர்கள் கம்யூனிசவாதிகளாகவே அதிகம் கானப்படுகிறார்கள், ஆனால் தனியாரிடம் கையேந்தும் பொருளியல்வாதிகள் அண்டத்தையே கணக்கிலடைக்கி முதலாளிகளுக்கு சேவகம் செய்கிறார்கள். ஆனால் நாம் குறைந்த பட்சம் இந்த பொருளியல் தத்துவத்தை நம் வாழ்விலேனும் கடைபிடித்து வளமாக வாழலாம். அதோடு பட்டபடிப்பு படிப்போருக்கு PERSONAL ACCOUNTS என்னும் தனிமனித கணக்கியலை ஒரு பாடமாக வைத்தால் மக்கள் சிக்கனமாக வாழகற்றுக்கொள்வார்கள்

இந்து தேசிய நாளிதழா?

"THE HINDU" என்று பெயர் வைத்துக்கொண்டு SECULAR , DIVERSED இந்தியாவின் தேசிய நாளிதழாக இருக்கமுடியுமா? தி இந்து என்ற பத்திரிக்கையை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இதில் கூத்து என்னவென்றால் "தி இந்து" வடநாட்டில் இல்லவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு விற்பனையே இல்லை. அங்கு விற்கப்படுவதெல்லாம் The Asian Age, The Times of India, Aaj Tak, The Statesman, The Hindustan Times போன்ற பத்திரிக்கைகள் தான். இந்து நாளிதழின் விற்பனை தமிழ்நாட்டிலுள்ள பார்பனர்களாலும் மேல் தட்டு மாநகரவாசிகளால் மட்டுமே வாசிக்கபடுகிறது. மற்றபடி தென்னிந்தியாவில்கூட இல்லை. எல்லா மாநிலத்திலும் ஏதாவது ஒரு அங்கில பத்திரிக்கை இருக்கிறது, ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மாநில அளவிலான ஆங்கில பத்திரிக்கையில்லை. ஆகவே "தி இந்து" தேசிய பத்திரிக்கை என்பதில் துளியும் உண்மையில்லை. இன்னும் சொல்லப்போனால் மற்ற மாநிலத்தில் தி இந்து பத்திரிக்கையை தொடக்கூட ஆள் இல்லை.


No comments: