சாதி எனும் நச்சுமரத்திற்கு வைக்கவேண்டும் தீ!
இதுவரை மத்திய மாநில அரசுகள் சாதி எனும் நச்சுவிதையை ஒழிக்க யாதொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் பெரியார் எனும் பகுத்தறிவாளன் வளர்த்த தன்மாணம் இயக்கம் இன்று பெரியார் திராவிடர் கழகமென இயங்கி வருகிறது. பெ.தி.க வாலிபர்கள் இதன் முதல் மாநாட்டில் சாதி மறுப்பு திருமண உறுதிமொழி ஏற்றனர். இதுபோல சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுறிமை அளித்து ஊக்குவிக்கவேண்டும். வெளிநாடுகள் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14ம் நாளை சாதி ஒழிப்பு(அல்லது மறுப்பு) நாளாக அறிவிக்கலாம். அதே நாளில் கலப்புத்திருமணங்களை அரசே நடத்திவைக்கலாம். சாதி, மதம், என மக்களை பிளவுப்படுத்தும் நச்சு மரங்களை கொளுத்தி நாட்டில் சனநாயகமும் சமத்துவமும் தழைத்தோங்க செய்வதே, மனித நல்லிணக்கத்தை விரும்புவோரின் தலையாய கடமை.
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment