பெரியாரிஸ்டுகள் கட்டாய திருமண பதிவை எதிர்க்காதது ஏன்?
திருமணமே கூடாது என்ற பெரியாரின் கருத்துக்கு மரண அடி கொடுப்பதுபோல் திருமணத்தை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்று இந்திய சர்க்கார் சட்டம் இயற்றி உள்ளது. திருமணத்தை பதிவு செய்யவேண்டும் என்று ஏற்கனவே நீதிமண்றங்கள் வலியுறுத்தினாலும் நடைமுறையில் இல்லை. இச்சட்டம் திருமணச்சட்டத்தில் உள்ள பிரச்சனைகள களையவும் நிர்வாக வசதிக்காவும் நடைமுறைப்படுத்தப்ப்டுகிறது. இச்சட்டத்தினால் இனி அனைவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்யவேண்டியுள்ளது, இல்லாவிட்டால் திருமண்த்தை நிரூபிக்க முதலிரவில் அணிந்த பாவாடையையோ நைட்டியையோதான் நீதிமண்றத்தில் கொடுக்கவேண்டும். இச்சட்டம் திருமணத்தை உறுதிப்படுத்த வசதியாக உள்ளது. திருமணமல்லாமல் சேர்ந்து வாழ சட்டம் அனுமதிக்கவேண்டும் தம்பதிகள் நண்பர்கள் போல நம்பகத்தண்மையுடன் தாலிகட்டாமல் சேர்ந்து வாழவேண்டும் என்ற புரட்சி திட்டத்தை ஒரு சிலர் நடைமுறையில் பின்பற்றி தற்கொலையிலும் நீதிமண்றத்திலும் நிற்கிறது. சில்க் சுமிதா தற்கொலை, காவேரி கோர்ட்டில். சரி நடிகை வாழ்க்கைதான் இப்படி என்றால் ஏமாற்றும் ஆண்கள் சமுதாயத்தில் இல்லையா? கட்டாய திருமண பதிவு திட்டம் நடைமுறையில் பெண்களுக்கு சாதகமாக இருந்தாலும், அடிப்படையில் பெண்ணுரிமைக்கு எதிரானதே. ஒருவேளை பெண் கணவனால் கைவிடப்பட்டால் திருமணப்பதிவு சாதகமாக அமையலாம் ஆனால் பெண் விலக நினைத்தாலோ இச்சட்டம் பெண்ணை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கிறதே! பெரியாருக்கு பின் பெரியாரின் இயகங்கள் அரசியல் அடிப்படையிலான பிரச்சனைகளையே கையிலெடுத்து போராடுகிறது. சமுதாய பிரச்சனைகளில் தெளிவின்றி கானப்படுகிறது. இப்போதுள்ள பெரியார் இயக்கங்கள் பெரியாரின் புத்தகத்தை படித்துவிட்டு இயக்கம் நடத்திக்கொண்டு இன்னொரு பெரியார் வேண்டுமென ஏங்கிகொண்டு இருக்கிறது. வாத்தி சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பதால் புதிய கண்டுபிடிப்புகள் வந்துவிடுமா? மாணவர்கள் மேலும் சிலவற்றை கண்டுபிடிக்கவேண்டாமா? மறைந்துவிட்டவரே மீண்டும் வந்து பாடம் நடத்த முடியுமா? பெரியார் இயக்கங்கள் மக்களின் தத்துவார்த்தமான வாழ்வியல் முறையை மாற்றவில்லை உதாரனமாக பொதுவுடமை கருத்து வேரூண்றப்படவில்லை, மாறாக பொருளாதார சார்பு சிந்தனைகளை மட்டுமே வளர்த்துள்ளது, உதாரணமாக பெண்கள் பொருளாதார முன்னேற்றமும் அதிகார மையத்தையும் ஓரளவு பிடித்துள்ளனர், ஆனால் தனித்து சமூதாயத்தை எதிர்கொள்ள இன்னும் தயாராகவில்லை, அதற்கும் மாறாக தன் வரவிற்கு ஏற்ற வரனையே தேடுகின்றனர். பெரியாரின் சோசியலிச சமுதாய கருத்துக்கு எதிரான தனியுடமை சுயநல கோட்பாடுகள் வளர்ந்துள்ளதை பார்த்தால், பெரியாரிஸ்டுகள் வழிமாறி போவதையே காட்டுகிறது. திருமணம் சம்பந்தமான சமாச்சாரங்களிலும் இப்படித்தான் குழப்பம் நீடிக்கிறது. கருத்துக்கு ஒரு பெரியாரும் புரட்சிக்கு ஒரு சேகுவாரா அல்லது பிரபாகரன் தமிழகத்தில் பிறக்கவேண்டும் அல்லது உருவாகவேண்டும்.
Monday, December 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment