இந்திய இராணுவத்தின் பொறுப்பின்மை
வெண்கல்லூரில் உள்ள இராணுவ முகாமில் இருந்து வந்த துப்பாக்கி குண்டு, 27 வயது நிகாரிகா ஜீனாவின் இடுப்பு பகுதியில் தைத்தது. சி.டி.எஸ் என்ற மென்பொருள் நிறுவணத்தில் பணிபுரியும் நிகாரிகா சம்பவத்தன்று மாலை 7.15 மணியளவில் தனது இரு சக்கர வாகணத்தில் கோரமங்களா வளைவு சாலையில் வந்துகொண்டிருந்தவர் இஜிபுரா சந்திப்பின் புறப்பாடு விளக்கொளிக்காக காத்திருந்தார். அப்போது அருகிலுள்ள இபுளூர் இராணுவ முகமிலிருந்து பாதுகாப்பு சுவரை தாண்டி வந்த குண்டு பாய்ந்தது. இப்படி அப்பாவி மக்களை இராணுவத்தின் குண்டு தாக்குவது இது முதல் முறை அல்ல, நாண்காவது முறை. ஏற்கனவே 2003ம் ஆண்டு சத்யஜித் குமார் சிங் என்பவரையும், 2005ம் ஆண்டு தாமஸ் என்பவரையும், ஏப்ரல் 2007ல் மெர்சி ஆண்ட்ரூ என்ற ஆசிரியையும் இதே இராணுவ முகாமில் இருந்து வந்த குண்டுகள் தாக்கியுள்ளது. ஆனால் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. மேலும் அதிகமான வீடுகள் உள்ள பகுதியாக இருந்தும், நெரிச்சலான சாலைகள் அருகில் இருந்தும், இராணுவம் பாதுகாப்பு சுவரை உயர்த்தவிலலை. மக்களால் இவர்களுக்கு பாதிப்பில்லை ஆனால் இவர்களால் மக்களுக்கு ஆபத்து. எனவே சுவரை உயர்த்துவதைப்பற்றி இவர்கள் சிந்திக்கவில்லை. அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டை பாதுகாப்பதாக சொல்லும் இராணுவம் அப்பாவி மக்களின் உயிரை பறிப்பதாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் நடத்தும் வெடிபயிற்சிகளால் பல வீடுகள் விரிசல்விட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இது போண்ற இராணுவ முகாம்களை மக்கள் இல்லாத பகுதிகளில் அமைப்பதுதானே அனைவருக்கும் எல்லாத்தருண்ங்களுக்கும் ஏற்றது?
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment