Monday, July 9, 2007

அநீதி அரசு!

ஏழை விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோது ஆட்சியிலிருந்த ஆட்சியாளர்கள் மீது கொலை வழக்கு போடு!
நிவாரன நிதி, இலவச அரிசி வாங்க காத்துக்கிடந்து தள்ளுமுள்ளில் உயிர்விட்டபோது காவலிலிருந்த காவலர்கள் மீது கொலை வழக்கு போடு!
பணம் முதலீடானால், உழைப்பும் முதலீடுதானே? உழைப்பு இல்லாவிட்டால் உற்பத்தி வருமா? முதலாளியும், தொழிலாளியும் சமபங்காளிதானே? ஆனால் உன்மை நிலை என்ன?


சிதம்பரம் பாக்கி வைத்திருக்கும் சில வரிகள்:-


1.தம்பதி வரி - கணவன் மனைவிக்கு போடப்படும் வரி
2.குழந்தை வரி - குழந்தை பெற்றால் போடப்படும் வரி
3.பட்டினி வரி - ஏழ்மையால் இருக்கும் பட்டினிக்கு வரி
4.தாய்ப்பால் வரி - குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலுக்கும் வரி
5.நடை வரி - நடந்தால் போடப்படும் வரி

புரட்சிதமிழர்!

உழுது உழைத்து வண்டி வண்டியாய் நெல்லை குவிக்கும் கூலி விவசாயிகளுக்கு உன்னச் சோறில்லை.
ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும் உழைத்து கோடிக்கணக்கில் உற்பத்தி செய்து குவிக்கும் தொழிலாளிக்கு உரிமையில்லை. உண்மையான ஊதியமில்லை.
விண்னைமுட்டும் கட்டிடங்களை எழுப்புபவனுக்கு அவற்றின் நிழலில்கூட இடமில்லை.
விதவிதமாய் துணிகளை நெய்யும் நெசவாளிக்கு உடுத்த துணியில்லை, ஏன் இந்த அநீதி? பெற்றவளுக்கே பிள்ளை சொந்தமில்லை என்பது என்ன நீதி?
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் கூலி விவசாயிகளை சுரண்டிச் சேர்த்த பண்ணையார்கள், நிலபிரபுக்களின் நிலமும் சொத்தும் பரம்பரை சொத்து, முன்னோர்கள் செய்த புண்ணியம் என்று நயவஞ்சகமாய் நியாயப்படுத்தப்படுகிறது.
ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டிச் சேர்த்த முதலாளிகளின் சொத்துக்கள் முதல் போட்டு சம்பாதித்தது உழைத்து சேர்த்தது என்று மோசடியாய் நியாயப்படுத்தப்படுகிறது.
ஊதியம் கொடுக்காமல் திருடப்படும் உழைப்புதான் முதலாளிகளின் மூலதணம், நிலபிரபுக்களின் நிலம் சொத்து சுகவாழ்வு. யுகம் யுகமாய் தொடரும் இந்த சுரண்டலை, ஏற்றத்தாழ்வை, அநீதியை அடிமைத்தனத்தை ஒழித்துக்கட்ட இன்று வேகமாய் படர்ந்து வரும் அந்நியச் சுரண்டலை அழித்து ஒழிக்க
உழுபவனுக்கே நிலம், உழைப்பவனுக்கே அதிகாரம் என்ற புதிய சமூகநீதியை நிலைநாட்ட உழைக்கும் மக்களின் விடுத்தலைக்காக போரிட்டு மடிந்த தியாகிகளின் சாம்பலில் இருந்து பீணிக்சு பறவைகளாய் சிறகடித்து சீறி வருகிறது புரட்சிதமிழர் கட்சி.
உறுதி!


எத்தனை முறை என்னை சிறையிலிட்டாலும் என் கொள்கை மாறாது!

ஒரு பித்தனை ஆண்டியை போல் எந்தன் உள்ளமும் பேதமை கூறாது!

அரசனே எதிர்த்தாலும் அதிகாரம் பனித்தாலும் அச்சம் என் நெஞ்சில் இல்லை!

ஒரு முரசினை போலவே கொள்கையை முழக்குவேன் மூச்சிலும் கெஞ்சல் இல்லை!


உரசி என் உடலினை பாறையில் தேய்த்தாலும் உறுதியோ குலைவதில்லை
உரசி என் உடலினை பாறையில் தேய்த்தாலும் உறுதியோ குலைவதில்லை

தமிழ் அரசினை நிறுவவே உன்கிறேன் உடுக்கிறேன் அது வரை சோர்வதில்லை, நான் அது வரை சோர்வதில்லை!
பெண்கள்!


ஏடுகளில் அட்டைகளில் முன் பக்கத்தில்
வீடுகளில் அடுப்படிகளில் பின் பக்கத்தில்

Saturday, July 7, 2007

காவிரிப்போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!


சமூக அநீதிகளை சகித்துக்கொண்டும் கோழைகளாய், அடிமைகளாய், தன்னலவாதிகளாய் இழிந்த வாழ்க்கை வாழும் அற்ப மணிதர்களைக் கண்டு சினந்து வெடிக்கும் பாரதிதாசனின் கவிதை வரிகள்:
பள்ளம் பறிப்பாய்
பாதாளத்தின் அடிப்புறம் நோக்கி அழுந்துக அழுந்துக!
பள்ளந்தனில் விழும் பிள்ளைப் பூச்சியே
தலையை தாழ்த்து முகத்தை தாழ்த்து
தோளையும் உதட்டையும் தொங்கவை!
ஈன உளத்தை உடலை உயிரைச் சுருக்கு
நக்கி குடி அதை நல்லதென்று சொல்!
தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும் தாழ்ந்து போ
குணிந்து தரையை கவ்விய ஆமையைப் போல் அடங்கி ஒடுங்கு!
ஒட்டுப் பூச்சியே உண்மை தேரையே!
அழு, இழி, அஞ்சு குனி பிதற்று
கண்ணங்கருத்த இருட்டின் கறையே!
தொங்கும் நரம்பின் தூளே! இதை கேள்!
மணிதரில் நீயும் ஓர் மணிதன் மன்னன்று.
இமை திற எழுந்து நன்றாய் என்னுவாய்
தோளை உயர்த்து சுடர் முகம் தூக்கு
மீசையை முறுக்கி மேலே ஏற்று
விழித்த விழியில் மேவிண்ணுக்கொளி செய்
நகைப்பை முழக்கு நடத்து லோகத்தை
உன் வீடு உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகளுக்கிடையில் திரையை விலக்கி
நாட்டோடு நாட்டை இணைத்து மேலே ஏறு
வானை இடிக்கும் மலை மேல் ஏறி நின்று பாரடா எங்கும் பாரடா!
முடி கொடுக்கும் பக்தா, விரலை கொடுப்பாயா?
நாடு காக்கும் கடவுளின் கோயிலுக்கு பூட்டு எதற்கு?
கருனையே வடிவான கடவுளுக்கு கொலைவாள் எதற்கு?
தீ மிதிக்கும் பக்தா மின்சார கம்பியை பிடிப்பாயா?
நாவில் அலகு குத்தும் பக்தா, கண்ணில் குத்திக் கொள்வாயா?
5 பேரை மணந்த பாஞ்சாலி பத்தினியா? இன்றைய நடைமுறை வாழ்விற்கு நியாயமாகுமா?
கடவுள் காக்கும் நாட்டில் ஏன் கொலை கொள்ளைகள்?
கலைஞர் ஐயா அவர்களே!போன தேர்தல்ல ஓட்டுப் போட்டுட்டு ரசினி இரண்டு விரல தூக்கிக்காட்டி உங்கள புறமுதுகுல குத்துனதுக்காக இப்போ கத்திய பரிசா குடுத்திங்களா? இல்ல இனியும் தமிழ்நாட்டு மக்கள புறமுதுகுல குத்த சொல்லி குடுத்திருக்கிங்களா?

ரசினி சார் நீங்க கொஞ்ச நாள் முன்னாடி நான் ஒரு குதிரை அப்படீன்னீங்க, அப்புறம் சிங்கம்ன்னீங்க, இப்போ தவளையா போய் மேடையில பேசுனீங்களாம், ஆனா காது கேட்காதுன்னீங்களாம், சரி நீங்க எப்ப மணுஷனா மாறப்போறீங்க?
பெங்களூரின் உண்மை பெயர் வென்கல்லூர் என்ற தமிழ்ப்பெயர் தெரியுமா?


இயற்பியல் படித்து சுவாமி பட்டம் வாங்கிய விவேகாணந்தன் கேட்டார்-என்னிடம் 100 இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்று! நீ வழிநடத்தப்போகும் 100 பேரை நீ தேர்ந்தெடுக்க தெரியாமல் யாரை கேட்கிறாய்? இந்த உண்மை புரியாமல் நீ என்னடா சுவாமி?

Sunday, July 1, 2007

ஒரு தமிழரிடம் கேட்கப்பட்ட கேள்வி!


"இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத பரபரப்பு ரசினிக்கும், "சிவாஜி'" படத்துகும் கொடுக்கப்படுகிறது, பார்த்தீர்களா?

அவரது பதில்,

"சினிமாக்காரர்கள் தமிழகத்தை எவ்வள்வு கேவலமாக, கீழ்தரமாக, தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம்! மாநில முதல்வர், முன்னாள் முதல்வர்கள் முன்கூட்டிப் பார்த்து படத்துக்கு விளம்பரச் சான்றிதழ் வழங்குகிற் கொடுமை உலகத்தில் வேறு எங்கும் நடந்திருக்காது. பாண்டிச்சேரி முதல்வரோ, ஒரு படி மேலே போய் ஒரு நடிகையோடு சேர்ந்து அந்தத்திரைப்படத்தின் முதல் சினிமா டிக்கெட் விற்பனையைத் துவக்கிவைக்கிறார்! அதேபோல், இன்னொரு நடிகருக்குப் பிற்ந்த நாள் விழாவாம்…. அதற்காக, பாண்டிச்சேரியில் இருந்து ஒரு ரசிகன் சென்னை வரை பின்னோக்கி நடக்கிறானாம்! அந்தப் பயணத்தை புதுவை முதல்வர் துவக்கிவைக்கிறார். சீரழிவின் உச்சகட்டம்ல்லவா இது!

பல மாதங்களாக உழைத்துச் சேர்த்த பணத்தைக் கொண்டு போய் பாலும் பீரும் வாங்கி நடிகரின் கட் அவுட்டுகளுக்கு ஊற்றுகிறார்கள். 20 ரூபாய் டிக்கெட்டுக்கள் 1,000 ரூபாய் வரை விற்கப்ப்ட்டதாகச் சொல்கிறார்கள். நடிகர்களுக்குப் பின்னால் அலையும் ஒவ்வொரு ரசிகனும், 'நான் ஒரு முட்டாளுங்க! ஏன்னா, நான் ரசிகர் மன்றத்தில் இருக்கேனுங்க' என்று தன் நெற்றியில் ஒட்டிக்கொள்ளாத குறையாக அலைகிறான்.

எந்தவிதக் கொள்கையும் கோட்பாடுகளும் இல்லாத ஒருவர் அரிதாரம் பூசிக்கொண்டு சினிமாவில் நடித்துவிட்டு, வயதான பிறகு நடிக்க முடியாமல் அரசியலைத் தொழிலாகச் செய்யலாம் என்று வருகிற கொடுமையும் தொடர்ந்து நடக்கிறது. இந்த நடிகர்களுக்கு என்ன பின்னனி இருக்கிறது? என்ன வரலாறு இருக்கிறது? மக்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள்? திரைப்படங்களில் இவர்கள் பேசுகிற வசனங்களுக்கும் கதைகளுக்கும் இந்த சமுதாயத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?"