Monday, December 24, 2007

சில தமிழர்களே கூறுவதைப்போல தமிழ்தேசியம் கூடாது என்று இந்திய தேசியவாதிகள் மட்டுமின்றி தமிழ் உணர்வையே ஒரு வெறி என்று சில அரசியல்வாதிகள் கூறுவதை நாம் ஒரு பக்குவமின்மையாகவே கருத முடிகிறது. இனவெறிக்கும், இன உணர்விற்கும் வித்தியாசம் தெரியாதவர்களுக்கு நாம் விளக்கம் கூறிவிடலாம். நாம் யாரையும் விரோதியாக கருதவில்லை நாம் எந்த ஒரு இனத்தையும் படுகொலை செய்யவில்லை, தாக்கவில்லை, நாம் ஒரு மொழி ரீதியான , கலாச்சார ரீதியான, வரலாற்று அடிப்படையிலான உணர்வையே வெளிப்படுத்தி அதனடிப்படையில் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்று. ஆனால் தமிழ்தேசியமே கூடாது எனும் தமிழர்கள் தான் கடுமையானவர்களாக தெரிகிறார்கள், நம்மில் சிலராக இருக்கும் இவர்கள் ஏன் இந்திய தேசியவாதிகளாக இருக்கவேண்டும் என கருதுகிறார்கள்? ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கருவை அருப்போம் என கொக்கரிக்கிறார்கள். ஏன் இவர்கள் உலகையே ஒரு நாடாக ஆக்ககூடாது? ஏற்றத்தாழ்வே வலியவர்கள் சுகவாழ்விற்கு ஏற்ற வழி எனக் கருதும் அமெரிக்காவை மட்டும் எதிர்ப்பதனால் என்ன பலன்? சர்வதிகாரிகளுக்கு எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் மனமில்லை என்பது மட்டுமின்றி மற்றவர்களை எதிரியாக பார்க்கும் குனமும் மாறவில்லை. எனவே இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் வெறும் வாய்வழி எதிர்ப்பை மட்டும் முழங்கிவிட்டு மூடிக்கொள்வார்கள். ஆனால் தந்திரமாக தடவிக்கொடுத்து, தட்டிக்கொடுத்து அடிமையாக்கும் இந்தியாவின் அடிமையாக இருப்பது இதமாக இருக்கிறது. நாம் மனித நேயமிக்கவர்களாகவும் மனித மாண்பு காப்பாளர்களாக இருந்தாலும் நமக்கென இயங்கு தளம், பூர்வீகம், பரிமாற்றம், கருத்தியல் விளைவு எல்லாமே இந்த இன உணர்வுள்ள தமிழகத்திற்குள்தான். நமக்குள் ஏற்படும் மாற்றங்கள் மற்றவர்களை பாதிப்பதோ, தாக்கத்தை ஏற்படுத்துவதோ இல்லை. அதேபோல் மற்ற இனத்தின் செயல்பாடுகளால் நாம் மாற்றத்திற்கு ஆளாவதும் இல்லை. எனவே நமக்கான எல்லை பரப்பளவில் மட்டுமின்றி என்னத்தாலும், மொழி உணர்வுகளாலுமே ஏற்படுகிறது என்பதை இந்த எதிர்ப்பாளர்கள் புரிந்துகொள்ள்வேண்டும். எங்கோ இருக்கும் ஒரு சாமியார், நம் முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தை எதிர்க்கும்போது அதுவும் சம்பந்தமே இல்லாமல் மதக்காரணங்களையும் புராணங்களையும் பேசி எதிர்ப்புகாட்டுவது மட்டுமின்றி ஒரு முதல்வரின் தலையை கேட்பது ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் தலையை கேட்பது போல் இருக்கிறது. இதையும் கேட்டுக்கொண்டு முதல்வர் அமைதியாக இருப்பது நம்மை கடும் கோபத்துக்குள்ளாக்குகிறது. இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாடு தனிநாடாவதுதான் தீர்வாக இருக்கமுடியும் என்ற கருத்து மககள் மத்தியிலே முளைவிடத்துவங்கியிருக்கிறது.

No comments: