Monday, December 24, 2007

வென்கல்லூர் இந்திய மேலாண்மை நிறுவணம்(IIM-Bangalore), மகாபாரதத்தை ஒரு பாடமாக சேர்த்துள்ளது. அதாவது மகாபாரதத்தில் மேலாண்மை குறித்த கல்வி இருப்பதாக அந்நிறுவண பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார். கிருஷ்ணன் தலைமை நிர்வாக இயக்குநராம், மற்றவர்கள் பல்வேறு பதவிகளை வகிப்பதாக எடுத்துக்கொண்டு மகாபாரதத்தை ஒரு நிறுவணமாக எப்படி நடத்தினார்கள் என்பதே இந்த பாடத்திட்டத்தின் நோக்கம். சரி அப்படியே கண்ணன் வெண்ணை திருடியது, ஆற்றோரம் குளித்த பெண்களை எட்டிப்பார்த்தது, அவர்களின் துணிகளை அள்ளிக்கொண்டு நிர்வாணமாக்கியது, கோபியர் கூட்டத்தோடு கூத்தாடுவது என சகல லீலைகளையும் கற்றுகொடுப்பார்கள் என நம்பலாம். மேலும் அஞ்சு பேருக்கு ஷிப்டு முறையில் மணைவியாக வாழ்ந்த பாஞ்சாலியை பத்தினியாக்கியது எப்படி, மணைவியை வைத்து சூதாடுவது எப்படி, அல்லது மணைவியை வைத்தாவது காரியத்தை எப்படி சாதிப்பது, என்பதை எல்லாம் விளக்குவார்கள் போல் தெரிகிறது. ஏற்கனவே இன்போசிஸ் நிறுவத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த தனக்கு கீழ் பணிபுரிந்த பெண்னிடம் சில்மிஷம் செய்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார், அதோடு பல கோடியை நஷ்ட ஈடாக அந்த பெண்னிற்கு கொடுத்து சரிகட்டிவிட்டனர். இது போண்ற சமாளிப்புகளையும் சொல்லிக்கொடுப்பார்களா? ஏற்கனவே பண்ணாட்டு நிறுவணங்களில் திறமைசாலி(?) நிர்வாகிகளின் லீலைகளை கண்டும்கானாமல் இருக்கிறது நிறுவணங்கள். இனி மகாபாரதத்தை படித்துவிட்டு என்னென்ன லீலைகளை நடத்த போகிறார்களோ? யோவ் நிர்வாக வாத்திகளா, நாட்டுல எத்தனை பிரச்சனைகள் மணிதர்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது, உதாரணமாக வெண்கல்லூர் போக்குவரத்து பிரச்சனை, மக்களின் நல்வாழ்வு, பெருகிவரும் கிரிமினல் குற்றங்களை தடுப்பது, கிராமபுற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த என்ன வழி, என பல்வேறு சமுதாய பிரச்சனைகள் உள்ளன. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட எந்த கல்வியும் இல்லை, இதில் மாட்டுவண்டிகூட இல்லாத காலத்து மகாபாரதக் கதையை போதிக்கபோகிறார்களாம். ஏற்கணவே சமுதாயப்பொறுப்பற்ற கல்வியால்தான் படித்தவர்கள் சமுதாயத்தை போட்டி போட்டுக்கொண்டு ஏமாற்றி வருகிறார்கள். இதில் மகாபாரதமும் இராமாயனமும் மத உணர்வைதான் வளர்க்கும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அண்புமனி சொன்ன மாதிரி மாணவர்களை மக்களுக்கு பணியாற்ற தயார்படுத்துங்கள். அதைவிடுத்துவிட்டு மக்கள் வரிபணத்தில் நடத்தப்படும் கல்லூரி தனியார் நிறுவணங்களுக்கு ஏஜெண்டுகளை தயார் செய்து அனுப்பவா உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது. இந்திய துணைக்கண்டத்தில் தற்போது நடந்துகொண்டிருப்பதில் இதுதான் மிகப்பெரிய ஊழல், மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் கல்லூரி மாணவர்கள் தனியார் நிறுவணங்களுக்கு வேலைக்கு செல்வதும், இங்கே குறைந்த செலவில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடுவது. இதற்கு காரணம் தனியார் நிறுவணங்களுக்கு ஏவலாக இருக்கும் மத்திய மாநில அரசுகளும், இனி மத்திய மாநில அரசுகள் வேலைக்கு ஆள் எடுப்பதில்லை என்ற நிலையும் தான். இதனால் ஒரு தலைமுறையின் உழைப்பை திருடி அடுத்த தலைமுறையின் உழைப்பை தனியாருக்கு விற்கும் வேலையை மானங்கெட்ட அரசியல்வாதிகள் செய்வதுதான். இந்த ஓட்டு பொறுக்கிகளை அகற்றும் நாளே மக்களுக்கு நன்னாள்.

No comments: