தேனி நக்சலைட் பிடிபட்ட கதை
கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ஏ।டி।ஜி.பி விஜயகுமாரை அனுப்பியதும் அவர் அப்படி எந்த நக்சலைட்டுகளும் இல்லை என்று நக்கலாக சொல்லிவிட்டதும் தமிழக அரசுக்கு பல்வேறு மக்கள் நல பிரச்சனைகளை நிறைவேற்றாமல் மழுப்புவதற்கே இத்தகைய கதைகளை கட்டி வருவது வெட்ட வெளிச்சமானது. இதற்கிடையே தற்போது நேர்மையான காவல்துறை அதிகாரி என்று பெயர் எடுத்த பொன்.மாணிக்கவேலை அந்த வேலைக்கு அனுப்பி 5 மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளை சுட்டு பிடித்துவிட்டதாக கதைகட்டுவது வேடிக்கையாக உள்ளது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஒருவர் வந்திருப்பதாக கூறுவது இதைவிட காமெடியாகத்தான் இருக்கிறது. ஒருவேளை தற்போது தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, மற்றும் டாக்டர் இராமதாஸ் இவர்களால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கமுடியாமலே இப்போது இப்படி ஒரு புரட்டை கிளப்பியுள்ளதாக தெரிகிறது. மற்றபடி இவர்களில் மூவருக்கு மட்டும் குண்டடிபட்டதாகவும் மற்ற இருவர் சரண்டர் ஆனதாக சொல்வதாக சொல்வதும் ஒரு செட்டப் என்றே மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. இது போன்ற மக்களை ஏமாற்றும் கதைகளில் இறங்காமல் உருப்படியாக காவல்துறையை செயல்படவிட்டாலும், அரசு மக்களுக்கு நன்மை செய்வதில் அக்கறை காட்டினால் நல்லது.
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment