Sunday, December 30, 2007

அமெரிக்க சனநாயகம் Vs இந்திய சனநாயகம்

அமெரிக்காவிற்கே போகமல் வெரும் பத்திரிக்கை அறிவையும், புத்தக அறிவையும் வைத்து நியாயமான அமெரிக்க சனநாயக கருத்தை எழுதிவிடமுடியாது இருப்பினும், நாம் நமக்கு தெரிந்த அளவில் பகிர்ந்துகொள்வோம். அமெரிக்காவில் அதிகமாக நடக்கும் போராட்டம் என்ன தெரியுமா? வெளிநாட்டின் மீது படையெடுப்பதற்கு எதிராகவும், மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராகவும் மனித உரிமை மீறலை கண்டித்தும் தான். ஏன் உள்நாட்டில் பிரச்சனையே இல்லை என்று கேட்கலாம். உண்டு கருப்பு இனம் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக நாடு கடத்தப்பட்டு நாய்களைப்போல் நடத்தப்பட்டனர். ஆண்டாண்டுகாலமாக அடிமையாக கிடந்தவர்கள் ஒரு பெண்மணியின் பேருந்தில் அமர்வு பிரச்சனையால் பேருந்து புறக்கனிப்பால், பேருந்தை அதிகமாக பயன்படுத்தும் கருப்பு இன மக்கள் போராட்டத்தை கையிலெடுக்க அமெரிக்காவின் வருவாய் கெட்டதுமட்டுமல்லாமல் பேருந்தை இயக்கவே ஆள் இல்லாத நிலைமை. போராட்டத்தை ஒடுக்க அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டாலும் பருப்பு வேகாமல் கருப்பு இன மக்கள் சமமாக அமர அனுமதிக்கப்பட்டனர். மார்ட்டின் லூதர் கிங்கின் கருப்பினத்திற்கான புரட்சியாலும் ஓரளவு உரிமைகளை பெற்றிருந்தாலும் நிற வெறி இல்லாமல் இல்லை. அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைதான் ஆதிக்கமாக இருக்கிறதே தவிர உள்நாட்டில் தனி மனித உரிமை என்பது சற்று தேவலை என்றே சொல்லலாம். தேவைக்கு அதிகமான வளத்திற்கு காரனம் உலக அளவிலான ஆககிரமிப்பு, பொருளாதார சுரண்டல், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என பல காரணங்கள் சொல்லலாம். மக்கள் தன்னிறைவு பெற்று வளமாக வாழ்வதுடன் தனி மனித சுதந்திரம் எவ்வள்வு என்று சொல்லத்தேவையில்லை. அதோடு ஒவ்வொரு மாகாணமும் சுயாட்சி அந்தஸ்து பெற்று விளங்குகிறது. ஊரை அடிக்கும் ரவுடி தன் குடும்பத்தாரிடம் பரிவாக இருப்பதை தமிழ் சினிமாவில் பார்த்திருப்போம் அதே கதைதான் அமெரிக்காவில். அதனால் தான் பிரச்சனை குறைவாக இருக்க காரணம்.

இந்தியா ஒரு சனநாயக நாடு என்று அமெரிக்க அதிபர்கள் சொல்வதே மிகப்பெரிய வேடிக்கை. அவர்களின் மனசாட்சிக்கு தெரியும் இங்கிருப்பது மக்களாட்சி இல்லை என்பது இருப்பினும் ஒரு பொய் சொல்வதால் ஏராளமான நன்மைகள் அவர்களுக்கு, எனவே சாதரனமாகவே புரட்டு பேசுபவர்களுக்கு நன்மை இருக்கும்போது பேசமாட்டார்களா என்ன? அமெரிக்கா உலகத்தை பிடுங்கி தன் மக்களுக்கு போடுகிறது, இந்தியா தன் மக்கள் உழைப்பை உறிஞ்சி அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு விற்கிறது. அமெரிக்கா குறைந்த மக்கள் தொகைகொண்ட பரந்த தேசம். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட சிறிய தேசம். இந்திய தலைவர்களுக்கே அமெரிக்க அடிமை புத்தி, அமெரிக்கனுக்கு உலகாளும் ஆதிக்க புத்தி, மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழியே, அடிமை தலைவர்கள் ஆளும் நாட்டில் அடிமை மக்கள் தானே இருப்பார்கள், ஒரு சிலர் விதி விலக்காக தன்மாணத்துடன் வாழலாம், ஆனால் விரல்விட்டு எண்ணிவிடலாம் இந்த சுயமரியாதைக்காரர்களை. அதே போல அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தாத சமதர்மவாதிகளையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். மக்களுக்காக அரசு என்றில்லாமல் அரசுக்கு மக்கள் அடிமையாய் வாழும் நாடுதான் இந்தியா, இந்த தேசத்தில் சன-நாயகம்(மக்கள்-ஆட்சி) இருப்பதாக சொல்லமுடியுமா?

No comments: