Monday, December 24, 2007

தமிழ்நாட்டின் திருநல்வேலியை சேர்ந்த லட்சுமன கைலாஷ் என்ற வாலிபர் வென்கல்லூரில் தங்கி ஹெ.சி.எல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் இந்து வெறி அமைப்புகளால் மாவீரன் என அழைக்கப்படும் சிவாஜி என்ற மராட்டிய மன்னனைப்பற்றி அவதூறாக ஆர்குட் இணையதளத்தில் எழுதியதாக ஆகஸ்ட் 31 ம் தேதி அதிகாலை புனே போலீசாரால் கைது செய்யப்பட்டார். 50 நாட்களுக்கு பிறகு அவர் தவறுதலாக கைது செய்ப்பட்டதாக விடுவிக்கப்பட்டார். இந்திய நாட்டில் அப்பாவிகள் எப்படி வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதற்கும் காவல்துறை எப்படி செயல்படுகிறது என்பதற்கும் இது மற்றுமொரு உதாரணம். தகவல் தொழில்நுட்ப குற்றங்களை கண்டறிய துருப்பாக பயன்படும் IP address எனப்படும் இணைய முகவரியை குற்றம் சாட்டப்பட்டவருக்கு இணைப்பு கொடுத்த ஏர்டெல் நிறுவணம் தங்களுக்கு தவறாக கொடுத்துவிட்டதாகவும் அதனால்தான் இந்த தவறு நடந்ததாகவும் புனே காவல்துறை தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவணம் கொடுத்த தவறான தகவலுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என காவல்துறை தெரிவித்துள்ள கருத்து காவல்துறையின் கேவலத்தை அறிந்த நமக்கு வியப்பில்லை என்றாலும் கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு படித்த விவரமான இளைஞரை பொறுப்பற்ற முறையில் 50 நாட்களாக காவலில் வைத்திருந்திருக்கிறார்கள் என்றால் இவர்களிடம் சிக்கும் எளிய அப்பாவி மக்களின் நிலை என்ன? இதில் கொடுமை என்னவென்றால் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட 45 நாட்களில் பினையில் வந்துவிடுகிறார்கள் ஆனால் இவரது பினையுருமையை இரண்டுமுறை புனே நீதிமண்றம் மறுத்துள்ளது. இது மேலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. நாங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் தலையிடுவோம், என கூறும் நீதிமண்றங்கள், நீதிபதிகள் ஒரு அப்பாவியை 50 நாட்களாக சிறையில் வைத்திருந்தது நீதிமண்றத்தின் குற்றமாகாதா? நீதியை நிலைநாட்டுவதாக கூறும் இவர்களே நீதியை கொலை செய்கிறார்கள். லட்சுமன கைலாஷின் தந்தையின் பெயரையும் குற்ற எண்னையும் கரும்பலகையில் எழுதி கையில் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது தாம் மிகுந்த வேதனைக்குள்ளாகி மனம் வெதும்பி அழுததாகவும், கடந்த 50 நாட்களாக கடும் மண உளச்சலால் அவதியுற்றதாகவும் கூறியுள்ளார், இவரது சம்பவம் வீரப்பன் விவகாரத்தில் அப்பாவி பொதுமக்களை கற்பழித்த காவல்துறையையும், எந்த விசாரனையும் இன்றி சிறையிலடைத்த நீதிமண்றங்களும்தான் நம் எண்ணத்தில் வருகின்றன. வேலைகிடைப்பதே குதிரைக்கொம்பு என்ற இந்த காலத்தில் இவர் இழந்த வேலை இவருக்கு மீண்டும் கிடைக்குமா? இனியும் அப்பாவி மக்களை கொல்லும் போலி எண்கவுண்டர்கள் தொடருமா? இவர்கள் காவல்துறையா இல்லை வெறிநாய்த்துறையா? இந்திய நாட்டோடு பின்னி பினைந்து வாழவிரும்பும் தேசபக்தகர்கள் என்ன சொல்லப்போகிறார்கள். இந்தியாவில் மணித உரிமை மீறலுக்கும், பொறுப்பற்ற கேவலமான நிர்வாகமும் ஒழிய இளைய சமுதாயம் உறுதியேற்கவேண்டும், உறுதியுடன் அதிகார வர்கத்திற்கு எதிராக போராடவேண்டும். 50 நாட்களாக சிறையில் வாடிய தமிழருக்கு நியாயம் கிடைக்கவேண்டும். வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? கொடுவாளினை எடடா மிகும் கொடியோர் செயல் அறவே!

No comments: