டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கூடியிருப்பதாலும், சென்செக்ஸ் 20,000 புல்ளிகளை தொட்டிருப்பதாலும், நாட்டின் தொழில் வளர்ச்சி பாதையில் செல்வதாக பொருளாதார வல்லுனர்கள் நம்புகின்றனர்। எனினும் தொழிலதிபர்கள் தங்களின் லாபம் குறைவதாக கவலையடைந்துள்ளனர். குறிப்பாக அசிம் ப்ரேம்ஜி தனது ஊழியர்களை சனிக்கிழமைகளிலும் வேலைக்கு வரவேண்டும் என்று சொல்கிறார். பல அறிஞர்கள் இந்த வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் புதிய திட்ட வடிவமைபுகள், புதிய உத்தி, புதிய தொழில்நுட்பம் இல்லாவிட்டால் இது பின் விளைவுகளை கூட ஏற்படுத்தும் என்கிறார்கள். எது எப்படியோ பல காலமாக தொழிலாளிகளின் முதுகில் பயணித்த முதலாளிகள் சற்று மூளையை கசக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசிம் பிரேம்ஜியை போல மேலும் தொழிலாளிகளையே நசுக்கப்பார்க்காமல் கொஞ்சம் சுயமாகவும் சிந்தித்தால் நல்லது. இந்த பங்கு சந்தை, வர்த்தகத்தில் எப்போது குதிரை கழுதையாக மாறும், கழுதை குதிரையாக மாறும் என்பதை கணிப்பது சற்று கடினம். சரி தொழிற்வளர்ச்சியால் நாடு முன்னேற்றம் அடைகிறது. ஆனால் சாமியார்கள் புத்தியில் முன்னேற்றமில்லையே! இப்போதேல்லாம் சாதுக்கள் தலையை கேட்க ஆரம்பித்துள்ளார்கள் இவர்கள் எப்போது சிந்திப்பது?
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment