Monday, December 24, 2007

இந்தியை கட்டாயமாக்க சட்டத்தில் இடமில்லை

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இந்தி மொழியை நிர்வாக மொழியாக கட்டாயமாக்காமல் இருக்க மத்திய அரசுக்கு அதிகாரமுண்டு என்று கருநாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சிரியாக் ஜோசப் கூறியுள்ளார்। தமிழகத்தில் இந்தி மொழியை பயன்படுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ள மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து எச்.சதீஷ் என்பவர் கருநாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மௌ ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சிரியாக் ஜோசப் மற்றும் நீதிபதி அசோக் ஹிஞ்சகேரி ஆகியோர் அடங்கிய கருநாடக உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், இந்திய சட்டவிதி 342 மற்றும் 347ன்படி இந்தி மொழி இல்லாத மாநிலங்களில், அதனை கட்டாயப்படுத்த முடியாது. அதிகாரப்பூர்வ மொழி விதிமுறைகளும் இதையே கூறுகின்றன. எந்த ஒரு மொழியையும் பொதுமக்கள் மீது கட்டாயமாக திணிக்க கூடாது என்று சட்டம் கூறுகிறது. இந்த விதிகளை கவனத்தில் கொண்டுதான், தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயமாக்காமல் விலக்கு அளித்துள்ளது. இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் சம்பந்தமாக சில சந்தேகங்கள்:

1.ஒரு மாநில நிர்வாக மொழி மற்றும் மத்திய அரசின் உத்தரவு சம்பந்தமான வழக்கை வேறொரு மாநிலத்தில் பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியுமா? தாக்கல் செய்தாலும் சம்பந்தமில்லாத மாநில உயர்நீதிமண்றம் நேரடியாக விசாரிக்கும் அதிகாரமுண்டா? முறையாக பார்த்தால் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அல்லவா தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்?2.பொதுநல வழக்காக பதிவு செய்த இந்த பொதுநலவாதிக்கோ அவர் சார்ந்த மாநிலத்தின் மொழி கொள்கைக்கோ என்ன பாதகம், அல்லது இந்தி மொழி தமிழ்நாட்டில் கட்டாயமாக்கப்படவில்லை என்பதால் இந்த கண்ணட நபருக்கு என்ன இழப்பு அல்லது பொதுநலத்திற்கு என்ன பாதிப்பு? கண்ணடர்களின் தமிழின விரோத போக்கின் காரணமாகவே இப்படி ஒரு வழக்கு.பல நியாயமான பொதுநல வழக்குகளை காரணமின்றி தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றங்கள் இப்படி சம்பந்தமில்லாத வழக்குகளை விசாரித்து தீர்ப்பும் அதற்கு ஒரு விளக்கமும் தருவதைப் பார்த்தால் நமக்கு பயங்கரமான மரியாதை வருகிறது.

No comments: