தமிழ்தேசியம்
தேசியம் என்பது என்ன? என்ற கேள்விக்கு தேசம் என்பதை பற்றி விவாதிக்காமல் தேசியம் பேசமுடியாது. ஒரு தேசம, பிரதேசம் என்பது என்ன அதில் உள்ளவர்கள் எப்படியிருக்க வேண்டும் அல்லது எப்படி இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல பிரச்சனைகள் இந்தியாவில் உள்ள தேசியங்களின் பிரச்சனையாக உள்ளது. சில இயக்கங்கள் இன்னும் திராவிட தேசியம் பேசுகின்றன, ஆனால் பெரியார் தொடங்கிய திராவிடர் கழகம் அவர் காலத்திலேயே திராவிட தேசியத்தை விட்டுவிட்டது, இறுதியாக அவர் பேசியது தமிழ்நாடு தமிழருக்கே என்றுதான். அதற்கு காரணம் திராவிடர் கழகத்தில் தமிழரை தவிர வேறு எவரும் இருக்கவில்லை, அதோடு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகியவற்றிற்காக அவர் பேசவில்லை. மேலும் அவர் வாக்கு அரசியலை விரும்பாதவராகவும், சமுதாய மறுமலர்ச்சியையுமே குறிக்கோளாக கொண்டிருந்தார்.
பெரியார் எல்லா பிரச்சனைகளையும் எடுத்து பேசிவிட்டார் என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் இன்று சில இயக்கங்கள் பெரியார் கைவிட்ட திராவிட தேசியத்தை மீண்டும் தமிழ்தேசியத்திற்கு எதிராக கையிலெடுக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் யாவும் தமிழகத்துடன் மோதல் போக்கையே கடைபிடித்து வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்திலேயே சகோதரத்துவம் இல்லை என்று ஒரு அமெரிக்க ஆய்வாள்ர் தனது ஆய்வு முடிவில் கூறியிருக்கிறார். கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை, நம்மிடையே உள்ள பிரச்சனையை உலகின் வேறு மூலையில் உள்ள ஒருவர் ஆய்வு செய்து சொல்லியிருக்கிறார் என்றால் அதன் முக்கியத்துவத்தை உணரவேண்டும். முதலில் நமக்குள்ளேயே ஒற்றுமையில்லை. இந்த வேற்றுமையை ஒழிக்க புறப்பட்ட பெரியார் என்ற போர்வீரன் தனது இறுதி மூச்சு வரை கத்தினானே தமிழன் திருந்தினானா? இந்த அரசியல் நாய்களை செறுப்பால் தான் அடிக்கவேண்டும். முற்போக்கான அரசியல் கருத்துகளை வெளியிடும் மருத்துவர் தமிழ்குடிதாங்கி ஒரு சாதி அரசியல்வாதியாகவும், பல்வேறு பாசிச உணர்வுகளையும், சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாகத்தான் இருக்கிறார். குடும்ப, வாரிசு அரசியலும் அவரிடமும் மலிந்து கிடக்கிறது. இப்படி பலரும் பல்வேறு நிலைகளில் வேகும் வீட்டில் புடுங்கியது லாபம் என்று சாதி வக்கீல்களாக மாறி பின் கல்லாகட்டிவிடுகின்றனர். முடிவில் தன் சாதிக்கும் நன்மை இல்லை, நாட்டுக்கும் எந்த நன்மையும் இல்லை. இப்படித்தான் மக்களை அடகு வைத்து சொத்து சேர்கின்றனர் அரசியல் தலைவர்கள். இதற்கு காரணம் இளைஞர்கள் தன்னலமற்றவர்கள் அரசியலை வெறுத்து ஒதுங்குவது தான். சோசியலிச சமுதாய புரட்சியால் நாட்டை புரட்டி போட்டு அதில் ஒரு புதிய வரலாற்றை எழுத தொங்கவேண்டும். இந்த முன்னெடுப்பை எத்தனை இயக்கங்கள் செய்கின்றன? தாங்கள் அதற்காக செயல்படுவதாக சொல்லும் பல இயக்கங்கள் எவ்வளவு உழைத்திருக்கின்றன? எவ்வள்வு மக்களை சந்தித்திருக்கின்றன? மக்களின் அறியாமையையும், கட்டுபாடுகளையும் உடைப்பதே இன்று வரை இயலாத காரியமாக இருக்கிறது. ஏற்கனவே தனியார்மய, தாராளமய, உலகமய என்ற மாயைகள் மக்களை மேலை நாட்டு பொருளுக்கும், சந்தைக்கும், நுகர் சிந்தனைக்கும் ஆளாக்கிவிட்டது. இன்றைய இளைஞர்கள் புரட்சி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்குத்தான் உள்ளது. உழைக்கும் மக்களுக்காக சிந்திக்கின்ற குரல்கொடுக்கின்ற இயக்கங்கள் முன்னேறிய சமூகத்தின் சிந்தனையை மாற்றி அவர்களுக்குள் சகோதரத்துவ, சமத்துவ, சோசியலிச சிந்தனைகளை ஏற்படுத்தாமல் எப்படி தமிழனிடத்திலே தன்மான உணர்வை ஏற்படுத்தமுடியும்? எப்படி இந்த பொருளாதார ரீதியாக வெகு விறைவாக வளரும் இந்த ஆதிக்க சக்தியின் புத்தியில் சோசியலிசத்தை நிறுவமுடியும்? இந்த சமூகமே பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது, மனித நேயம் துளியும் இல்லாமல், சமுதாய பார்வையற்று, தன்னலமாக கலாச்சார ரீதியாகவும் சீரழிந்து வருகிறது. இப்படியே போனால் எப்படி சோசியலிச தமிழ் தேசியத்தை வெல்லமுடியும்?
Thursday, December 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment