உலகையாளும் வாரிசு அரசியல்
பெநசீர் புட்டோவை மண்டையில் போட்டனர் அல்-குவாயிதா இயக்கத்தினர். ஆனால் பாகிஸ்தான் சர்வாதிகார அரசோ அவரே அவர் தலையில் இடித்துகொண்டு மரணமடைந்தார் என்று கதைகட்டுகிறது. மக்களின் ஆத்திரம் அரசுக்கு எதிராக திரும்பிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த கதையை கட்டியுள்ளனர். ஆனால் பெநசீரை அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்று அல்-குவாயிதா வர்ணித்துள்ளது உண்மையே, ஆனால் அவரோ பாகிஸ்தானின் மகள், கிழக்கு மண்ணின் புதல்வி என்று வர்ணிக்கிறது ஊடகங்கள். இதில் கூத்து என்னவென்றால் உலகெங்கும் மக்களாட்சி என்ற பெயரில் வாரிசு அரசியல் களைகட்டுகிறது என்பதுதான். இதில் கோமாளித்தனம் என்னவென்றால் நெய்யில் வளர்ந்து பட்டுக்கம்பளத்தில் தூங்கிய ஆக்ஸ்போர்டு மாணவனும் பெநசீர், ஆசிப்பின் மகனுமான 19 வயது பிலாவலை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக்கியிருப்பதுதான். மகன் அரசாள தந்தை உதவியாளராக இருப்பாராம். பிலாவல் இஸ்லாமிய அரசாட்சியில் இளவரசர் பட்டம் சூட்டப்பட்டு மக்களாட்சியின் பிரதிநிதியாக போகிறாராம். ஆகட்டும், ஆனால் பாகிஸ்தான் மக்களின் வாழ்வு நிலை என்ன என்பதை அறியாத பாலகனை தலைவனாக்கியிருப்பது அனுதாபத்தை தேடுவதற்காக மட்டுமல்லாது, ஆசிப் அலி சர்தாரிக்கு மக்கள் செல்வாக்கு கிடையாது என்பதோடு இவரையும் துப்பாக்கி முனை தீர்த்துக்கட்டிவிடும் என்பதற்கு அஞ்சியே இந்த ஏற்பாடு. ஆனால் 19 வயது இளைஞனை பிரதமராக்கமுடியாது. குழந்தை உடம்பில் வெடிகுண்டை கட்டி வெடிக்க செய்த தேசத்தில் என்ன கருனையை எதிர்பார்க்கமுடியும்? பெநசீர் தனது உயிலில் தனது கணவரை தனது அரசியல் வாரிசாக எழுதியுள்ள நிலையில் இது ஒரு இராஜதந்திரமாகவும் தெரிகிறது. மகனை தலைவானாக்கி தான் பின்னிருந்து அதிகாரத்தை செலுத்தும் வாய்ப்பும் உள்ளது இந்த கதை போக போகத்தான் புரியும். நம்ப கருணாநிதி கூட இஸ்லாமிய மக்கள மனசுல வச்சி பெநசீருக்காக கவிதை எழுதுறாரப்பா.....
Sunday, December 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment