Sunday, December 30, 2007

தோழா எனக்கு இளம் வயதிலிருந்தே பொது நன்மைக்கு ஒவ்வாத வாழ்க்கையை வாழ்வதில் விருப்பமில்லை. இப்படி சமூகநலத்திற்கு எதிரான சக்திகளை எதிர்பவர்களாக இருப்பதால் நாம் பல இன்னல்களை சந்திக்கவேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல நாம் நம் சொந்த வீட்டிற்குள்ளேயே கூட நாம் பல எதிர்ப்புகளை சந்திக்க நேரிடுகிறது, பெற்றோர் தங்கள் விருப்பபடியே நாம் நடந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகின்றனர். இதை தாண்டி நாம் வரும்போது சமுகத்தில் நமக்கு எதேதோ பட்டம் கட்டிவிடுகிறார்கள். நம்மீது வெருப்புகாட்டுவார்கள், இன்று கூட நான் பல இன்னல்களை சந்திக்கிறேன், நம் மனதிற்கு ஏற்படியான சமூக சிந்தனையுடன் கூடிய வாழ்க்கைத்துனை அமைவதே சாத்தியமில்லை என்று தோன்றுகிறாது. சமுதாய சிந்தனை காரணமாகவே பல வகையில் தனிமைபடுத்தப்படுகிறோம். தங்கும் விடுதியில் கூட நம்மை ஏதோ தேசதுரோகியை போலவும், நாம் எல்லாம் அவர்களின் நல்வாழ்க்கைக்கு எதிரானவர்கள் என்றே பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் எனக்கு இப்படி அலுவலகத்திலும் பலரது பேச்சுக்கு அடங்கியெல்லாம் வேலையை பார்ப்பதில் உடன்பாடில்லை, நம்மை பயன்படுத்திக்கொள்ள எந்நேரமும் ஒரு கூட்டம் திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறது, அதற்காக நம்மிடம் பல பொய்யையும் புரட்டையும் பேசுகிறார்கள், அதையும் நாம் தெரிந்தே சகித்துக்கொண்டு இருக்கவேண்டியிருக்கிறது. உண்மையாக சொல்லப்போனால் நாம் வாழ விரும்புவதற்கு எதிராக வாழ்ந்துகொண்டிருக்கிறோம், எனவே அனைவரும் சகோதரத்துவத்துடன், இனைந்து வாழும் கூட்டுடமை சமூகத்தை அமைக்கவேண்டிய கடமையை இளைஞர்கள் செய்யாமல் வேறு யார் செய்வது. ஆனால் இன்றைய இளைய சமுதாயம் துளியும் சிந்தனையின்றி அடிமைகளாக வாழ்கிறார்கள் என்ன செய்வது, அரசியல் தலைவர்களும் மக்கள் முட்டாள்களாக இருப்பதையே விரும்புகிறார்கள். இதை கானும் போது நமக்கு எப்போதும் மனதில் ஒரு காயத்துடனே வாழ்வதை போன்ற உணர்வும் இந்த சுகவாழ்வை விட இந்த நிலையை மாற்ற உயிர் துறப்பதே கூட மரியாதை என்று தோன்றுகிறது தோழா, ஆனால் இன்று உன்மையான தோழர்களும், தோள் கொடுக்கும் இயக்கமும் எங்கே தோழா இருக்கிறது. நான் சொல்கிறேன் என்று தவறாக என்னவேண்டாம், இன்றும் கூட ம.க.இ.க வும், பெ.தி.க வும் இனைந்து ஆயுதம் ஏந்தினால் தமிழகத்தை தலைகீழாக புரட்டிவிடமுடியும், இரண்டு இயக்கத்தையும் சேர்த்தால் 3000 பேர் தேறுவோம், கொளத்தூர் மணி அவர்கள் நினைத்தால் எவ்வளவோ ஆயுதங்களை தயார் செய்துவிடமுடியும், பெரியாருக்கு பின் இரண்டு தலைமுறை காலாவதியாகிகொண்டு இருக்கிறது தோழா, ஆனால் இன்றும் இந்த தேசம் நாம் விரும்புதற்கு எதிரான பாதையில் அரசாட்சி செய்துகொண்டு வெகு வேகமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது, நாம் வெறுமனே உழைக்கும் வர்க்கத்திற்காக குரல் கொடுப்பதற்கு மேல் வேறொன்றும் செய்யமுடியவில்லை. தமிழகத்தை பொறுத்தமட்டில் இன்னும் வேர்விடவே இல்லை. நாம் என்றைக்கு விடுதலை கான்பது தோழா? இன்றே இப்போதே, ஆயுதமேந்த வேண்டும், இன்னும் சொல்லப்போனால் வீரப்பன் காலத்தில் எவ்வளவோ செய்திருக்கலாம், ஆனால் மாறன் வீரப்பனை சேரவே பலகாலமாகிவிட்டது. இன்றைக்கு காட்டுக்குள் போக எவருமில்லை. எனது படிப்பிற்கும் திறமைக்கும் என்றோ அமெரிக்காவிற்கு போயிருக்கலாம், ஆனால் சுகவாழ்விற்காக தாய்நாட்டில் படித்துவிட்டு எங்கோ எவருக்கோ உழைப்பது தன்மாணம் உள்ளவர்க்கு ஏற்புடையதாகுமா? ஆனால் இங்கு மட்டும் என்ன செய்துகொண்டிருக்கிறோம், இங்கிருந்துகொண்டு அதையே தான் செய்கிறோம். என்ன வாழ்க்கை தோழா, எனக்கு பணத்தின் மீது துளியும் விருப்பமில்லை. நடுத்தரம் வர்க்கம் என்பதே கூட இன்று வெறித்தனமாக சொத்து சேர்க்கும் முயற்சியில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவனின் குரல்வளையை அறுத்துகூட காசு பார்க்கும் உலகமாகி கொண்டிருக்கிறது. "உதாவது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா" என்று பாரதிதாசன் பாடிவிட்டு போய் அறை நூற்றாண்டு ஆகிவிட்டது தோழா எவரும் இன்று கூட விழிக்கவில்லை, "நாளை என்பது மிகவும் தாமதம்" என்று ஹாகோ சாவேஸ் இன்றைக்கு சொல்லும் பேச்சு யார் காதிலும் விழவில்லை. தமிழகமே உலகமயமாகிவிட்டது, தென்னிந்தியாவின் மையமாகிவிட்டது, இளைஞர்கள் யாருமே நாட்டைப்பற்றி யோசிப்பவர் இல்லை, தனக்கு அருகில் இருப்பவன் யார் என்பதைக்கூட பார்க்க தயாராக இல்லை. சுதந்திரமும் தன்மாணமும் இல்லாத நாட்டில் நாம் கற்கவேண்டியது கல்லூரி கல்வியல்ல தோழா பெரியாரின் பகுத்தறிவு கல்வியும் மார்க்சியமும் தான், இன்று ஏதாவது ஒரு பாடசாலையில் இந்த கல்வி இருக்கிறதா, பெரியாரின் சொத்துக்களை சுகபோகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் வீரமணி. பெரியாரின் திராவிடர் கழகமே இன்று பார்ப்பனிய இயக்கமாக மாறிவிட்டது என்றால் அது மிகையாகாது, அதேபோல் தான் திரவிட இயக்கத் தமிழர் பேரவையும். அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளில் சிக்கி தவிக்கிறது. நான் எம்.பி.ஏ படித்ததுகூட பெருமளவில் பொருளீட்ட வேண்டும் என்பதற்காக தான், ஆனால் அந்த பணத்தை கொண்டு ஒரு மக்கள் புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதே லட்சியம். இப்போதும், தமிழகத்தை ஒரு சமதர்ம சமுதாயமாக மாற்றவேண்டும் என்பதில் ஒரு வேகம் இருக்கிறது. ஆனால் நாம் முதியோர்களையா வைத்து நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தமுடியும்? நம் இளைஞர்கள் எல்லாம் தன்மாணம் இழந்து இழிவானாலும் சுகவாழ்வு தேடிக்கொண்டார்கள். மிச்சமிருப்பவர்கள் சோத்துக்கே செத்துக்கொண்டு அடிமைகளாக இருக்கிறார்கள், சூழ்ச்சிகள் தான் அனைவரையும் ஆள்கிறது, நாம் என்ன செய்வது தோழா? மக்கள் புரட்சியை நடத்தும் சூழ்நிலையே தமிழகத்தில் இல்லை, இந்த புரட்சியை செய்ய நினைத்தாலே காவல்துறையின் இரும்பு கை நீள்கிறது என்ன செய்யலாம்?

No comments: