DYFI சென்னை மாநாடு!
சென்னையின் அனைத்து சுவரிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விளம்பரங்கள் சுமார் 6 மாதத்திற்கு முன்பு இருந்தே தென்பட்டது, நானும் மாநாட்டுக்கான நாளுக்காக காத்திருந்தேன். 3ம் வகுப்பு 4ம் வகுப்பு படிக்கும் போது Join DYFI என்ற வாசகங்களை பார்த்து ஏதோ என்று நினைத்திருந்தவனுக்கு இவர்களை பற்றி அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக கருதி முதல் நாளே போயிருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் இவர்கள் இயக்கத்திற்கு ஆள் பிடிக்கும் உத்திபற்றி ஒரு மாத இதழில் படித்து இருக்கிறேன், அதோடு இவர்களின் இந்திய ஜனநாயக என்ற பெயரிலேயே நமக்கு வேறுபாடு இருந்தது. இருந்தாலும் பார்ப்போம் என்று காமராசர் அரங்கத்திற்கு போயிருந்தேன், முகப்பில் இருந்த பந்தலில் இவர்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரமுகம் இவற்றின் விளம்பரங்களை பார்த்தேன் ஆனால் முன்பே மாநாடு துவங்கியிருந்தது. நான் தந்தை பெரியார் திராவிடர் கழக முதல் மாநாட்டில் பார்த்த கூட்டம் கூட தென்படவில்லை. த.பெ.தி.க மாநாட்டில் மக்கள் அமர இடமில்லாமல் நடைபாதையிலும் கதவை திறந்து வைத்துக்கொண்டு வெளியிலும் மேடையின் இருபுறமும் தோழர்கள் கூட்டம் கூடி நின்றது. ஆனால் இங்கு இருந்த பாதிக்கும் மேலான கூட்டம் மலையாளிகளாக இருந்தனர். மேடையில் பல வெளிநாட்டு சோசியலிச பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர். ஏற்கனவே ஆங்கிலத்தை உயர்த்தி பிடித்து பத்திரிக்கை வியாபாரத்தை தமிழ்நாட்டில் நடத்திகொண்டு சிங்கள பாசிச அரசின் ஏவலாக விளங்கும் இந்து ராம் இருந்தார், நித்யஸ்ரீ மகாதேவன் என்ற சமஸ்கிருத அவா இருந்தார், இவர் எதற்காக மேடையில் அமர்ந்திருந்தார் என்று அவருக்கும் புரியவில்லை, எனக்கும் புரியவில்லை. பின்னர் சீதாராம் யெச்சூரியும், மலையாள நடிகர் மம்முட்டியும் ஒருவர் பின் ஒருவராக மேடையேறினர், முதலில் பேசிய மம்முட்டி மதவாதத்திற்கு எதிராக பேசியதுதான் பின்னர் அவருக்கு மிரட்டல் விடும் அளவிற்கு மதவாதிகள் போனார்கள். சீதாராம் யெச்சூரியோ தேசிய ஒருமைபாட்டையும் பிராண்சு அதிபர் நிக்கலோஸ் சர்கோசியையும் பற்றி பேசிகொண்டிருந்தார், அங்கு மேடையேறி மாநாட்டை நடத்திகொண்டு இருந்தவர்களின் பேச்சில் மலையாள நெடி தான் இருந்தது. நான் வெளியில் வந்து, பகத் சிங் மற்றும் அம்பேத்கர் உருவம் பொறித்த ஆடைகளும் வாங்கிகொண்டு கூடவே சே படம் ஒன்றும் சில அட்டைகளையும் வாங்கிகொண்டு கிளம்ப நித்யஸ்ரீ மகாதேவனும் அவா இவா என்று பேசிக்கொண்டு ஒரு குவாளிசில் ஏறினார், சுற்றி ஒரே மலையாளக்கூட்டம், தொடர்ந்து மம்முட்டி தானே ஒரு ஸ்விப்ட் காரை இயக்கிகொண்டு தனியாக கிளம்பினார், நானும் எனது வாகணத்தை இயக்கிகொண்டு கிளம்பிவிட்டேன். DYFI பற்றி நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
அமெரிக்கவின் தவறான அனுகுமுறை!
ஏதோ சம்பளம் அதிகம் கொடுக்கவேண்டும், அமெரிக்காவிற்குள் இந்தியர்கள் அதிகமாக வந்துவிடுவர், அதோடு பொறியாளர்கள் தங்கள் கலாச்சாரத்தை மாற்றிவிடுவார்கள் என்பதோடு உள்நாட்டு பாதுகாப்பு, மற்றும் சில பொறியாளர்கள் தங்கள் சொந்தத்தை பிரிந்து வாடுவார்கள் என்று எண்ணி அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நாடுகள் இந்தியாவிலேயே தங்கள் நிறுவணங்களை நிறுவ வந்தது பணம் இந்தியாவிற்கு அந்நிய முதலீடு, வருமாண வரி என பல வழிகளில் வருமாணம் இதனால் இந்தியவில் பல்வேறு போட்டிகள் பொருளாதார வளர்ச்சி என்று மேல் தட்டு மக்களின் கொண்டாட்டம் என இந்திய சந்தை களைகட்டினாலும் அமெரிக்காவிற்கு இந்த அனுகுமுறையால் உள்நாட்டு வேலைவாய்ப்பு பிரச்சனை, டாலரின் மதிப்பில் பிரச்சனை என போய்கொண்டிருப்பதை பார்த்தால் அமெரிக்காவின் இந்த அனுகுமுறையில் தொலைநோக்கு பார்வையிருப்பதாக தெரியவில்லை. மாற்று அரசாங்கம் அமையும்போதுதான் தெரியும், எந்த வகையான மற்றங்கள் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Thursday, December 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment