சிங்கள இனவெறியனை காக்கும் தமிழ்நாடு காவல்துறை
கடந்த 29.10.2007 அன்று பெரியார் திராவிடர் கழகத்தினர், பல இடங்களில் சிங்கள இனவெறியினரின் காட்டுமிராண்டித்தனதிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். எல்லாளன் தற்கொலைப்படை தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் உடலை சிங்கள அரசு நிர்வாணப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். இதை மனிதாபிமாணம் உள்ள எவரும் ஏற்கமாட்டார்கள். போர்கைதிகளையும் மரணமடைந்த வீரர்களையும் மரியாதையுடன் நடத்தப்படவேண்டும் என்ற மரபை சிங்கள இனம் என்றுமே கடைபிடித்ததில்லை. நிர்வாண உடல்களை பெண்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தது சிங்கள இனம் துளியும் பொதுமாண்பு இல்லாத சமூகம் என்பதையே காட்டுகிறது. இதைக்கண்டு கொதித்த பெரியார் தி.க வினர் கோவையில் ராசபக்சேவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர், அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த தமிழக காவல்துறையினர் ஏதோ ராசபக்சேவின் பக்தர்களைப்போல் அதை தடுத்தனர். சிங்களனின் பொம்மையை எரிப்பதை தடுக்க அரசு இவ்வளவு அக்கறை காட்டுகிறதே தமிழர்களை அவமதிப்பதையும், கொலை புரிவதையும், எப்படி நம்மால் ஏற்கமுடியும். கொலைகாரன் ராசபக்சேவிற்கு அரச மரியாதை, தமிழர்களின் உணர்விற்கு தண்டனையா? அய்யா நெடுமாறனின் மனிதநேய முயற்சிக்கு தடை, ராசபக்சே பொம்மைக்கு பாதுகாப்பா? தமிழ்நாடு காவல்துறையே நீ தமிழ் மக்களின் காவல்துறையா? இல்லை ராசபக்சேவின் பொம்மைக்கு காவல் நாயா? தமிழ் மக்களின் உழைப்பில் சம்பளம் வாங்கும் நீங்கள் வாழ்வது எங்கள் உழைப்பில் வாலாட்டுவது சிங்களனுக்கா? தமிழக முதல்வரின் தலையை கேட்ட வேதாந்தியை கைது செய்ய துனிவில்லாத காவலர்களுக்கு காக்கி உடை எதற்கு? நட்சத்திரம் எதற்கு?
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment