இந்திய துணைக்கண்டத்தில் தற்போது தலைவிரித்தாடும் பிரச்சனை உள்நாட்டுப் சட்டம் ஒழுங்கு பிரச்சனைதான். மேற்கு வங்கத்தில் ரிஸ்வானுர் என்ற ஆசிரியரை யார் கொலை செய்தது, காவல்துறையா? குஜராத் போலி என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய வழக்கில் 10 காவல்துறை உயரதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை. ஆணந்த என்ற பீகார் எம்.எல்.ஏ வால் கடத்தப்பட்டு பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், கேரள அமைச்சர் விமான பயணத்தில் ஐ.ஏ.எஸ் பெண் அதிகாரியிடம் சில்மிஷம் செய்தது, இப்படி இந்திய துணைக்கண்டம் எங்கும் நடக்கும் வழக்குகளையும் அதன் தன்மையையும், அதன் தீர்ப்புகளும் நம்மை கொதிப்படைய செய்கிறது. உண்மையிலேயே மக்கள் தங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளால் மாரடைப்பு வந்து சாவதாக தெரியவில்லை, அண்றாட பத்திரிக்கை செய்தி, கிரிக்கெட் என்ற போலி நாட்டுப்பற்று, தொலைக்காட்சி செய்தி, சீரியல்கள் ஏற்படுத்தும் மன உளச்சல், இது போண்ற பிரச்சனைகளால்தான் மாரடைப்பு வருகிறது. சரி போஸ்ட் மார்டம் எனப்படும் செத்தவர்களை அறுத்து காரணத்தை அரியும் வேலையை செய்து வரும் உச்சநீதிமண்றம் என்றாவது, இது போண்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தீர்க்க ஏதாவது ஒரு உருப்படியான யோசனையை சொல்லியிருக்கிறதா? வருமுன் காப்பதே நல்லது என்பது தனிநபர் நல்னுக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கும் பொருந்தும். நாட்டில் நல்லொழுக்கம் குறைய என்ன காரணம் என்ன ஏழ்மை, பணத்தாசை, நுகர்வு கலாச்சாரம், சொத்து சேர்ப்பு, இப்படி அடிப்படையில் பல பிரச்சனைகள். இதற்கு காரணம் அமெரிக்கா பெரியண்ணன், அவர்களைப்போல உடை உடுத்து, அவர்களைப்போல வீடுகட்டு, அவர்களைப்போல பலரோடு ஊர் சுற்று, பணத்தை பார்த்தால் மட்டும் பல்லை இளி என அந்த மாணங்கெட்ட மாக்களை பின்பற்றுவதே காரணம். இவர்களிடம் மனிதாபிமாணம் என்பது இருக்கிறதா? சரி நாம் யாராவது சுயமாக சிந்திக்கிறோமா? எல்லாம் ஆட்டு மந்தைகளாகவே வாழ்கிறோம், அடித்துப்போகும் வெள்ளத்தில் நாமும் அழுதுகொண்டே போகிறோம், யாராவது இந்நிலை மாற சிந்திக்கிறோமா? செயல்படுகிறோமா? நமக்கென்ன என்ற சுயநலம், அல்லது இது நம் வேலையல்ல என்ற பொறுப்பற்ற எண்ணம். இப்படியே போனால் வந்தவரை லாபம் என எரியுற வூட்டுல உருவியது லாபம் என அனைவரும் போட்டிப்போட்டால் என்ன மிஞ்சும்? வருங்கால சந்ததிக்கு பிரச்சனைகள்தான் மிஞ்சும். ஒரு சிறுவனிடம் ஒளிவிளக்கை கொடுத்தால் அதைக்கொண்டு ஓடுவான், அவனிடம் பிரச்சனைகளை கொடுத்தால் எதைக்கொண்டு ஓடுவான்? இங்கே யாரும் தனித்து இயங்க முடியாது, வேகும் அரிசியில் யார் மண்ணைப்போட்டாலும் வீண் தான். அதனால் அரசுகள் நன்னெறிகளை போதிப்பதோடு நிறுத்தாமல் நடைமுறைபடுத்த வேண்டும், அதற்கு முதலில் அரசியல் தலைவர்கள் புத்தி தெளியவேண்டும். பூனைக்கு யார் மணிக்கட்டுவது, தேவகவுடா ஆண்ட இந்திய துணைக்கண்டம் இது கருநாடகத்தைப் போலத்தான் இருக்குமோ? அதுசரி தேவகவுடா எப்படி பிரதமர் ஆனார், அப்போது அது கேட்பாரற்ற பதிவியாக இருந்ததால் நாய் கவ்விவிட்டது போல் தெரிகிறது.
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment