Thursday, January 31, 2008

சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை முடக்க சதி

அண்மையில் நடந்த சில மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் மண்ணை கவ்வ, மதவாத பா.ஜ.க வின் ராமர் கோஷத்திற்கு பயந்து இனி எட்டு மாநிலங்களுக்கு தேர்தல் வர இருப்பதாலும் மதவாதிகளின் பிடிவாதத்திற்கு மத்திய அரசு பணிந்துள்ளது. இதற்கு சப்பைக்கட்டு கட்ட சிங்கள கைகூலிகளான கடற்படை தளபதி பெரிய கப்பல்கள் போகமுடியாது என்றும் கடலோர காவல்படை தலைவர் சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தால் விடுதலைபுலிகள் ஊடுறுவ வாய்ப்பு இருக்கிறது, நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என்று கூறியிருக்கிரார்கள். இத்தனை நாளா எங்கடா போயிருந்தீங்க இந்த கதையை ஏன் இத்தனை நாளா சொல்லல? இந்த மத்திய அமைச்சர் இப்போ தொல்பொருள் துறை அறிக்கை கொடுத்த பிறகு தான் திட்டம் தொடங்கப்படும் அப்பிடிங்குது. இங்க டாக்டர் அய்யா மூண்றாவது அணி என்று சும்மா பம்மாத்து காட்டிவிட்டு அதிக சீட்டு கேட்க திட்டமிட்டு பா.ஜ.க தான் அடுத்த ஆட்சி என்ற கணிப்பில் சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை மதவாதிகள் மணதை புண்படுத்தாமல் மாற்று பாதையில் அமைக்கலாம் அப்படியே அதிமுகவுடன் கூட்டு சேரும் திட்டத்துடன் இருக்கிறார். நாசாமா போச்சு தமிழ்நாடு இந்த அரசியல் நாய்களால்.

1 comment:

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Wireless, I hope you enjoy. The address is http://wireless-brasil.blogspot.com. A hug.