Tuesday, January 29, 2008

வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள்:

1. முன் கதவில் வெளியில் பார்ப்பதற்கு 'லென்ஸ்' பொருத்தவேண்டும்.

2. மரக்கதவிற்கு முன் இரும்பாலான கிரில் கதவு அவசியம்.

3. உட்புறமாக கதவுச் சங்கிலி இருக்க வேண்டும்.

4. ஜன்னல்களின் கிரில்கள் கனமானதாகவும், சுவரில் பதித்து சிமெண்ட்டால் பூசியிருக்க வேண்டும்.

5. ஒவ்வொரு வீட்டிலும் தரையிலோ, சுவரிலோ, பதிக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டகம் வைத்து அதில் விலையுயர்ந்த பொருட்களை வைக்க வேண்டும்.

எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

முதலில் நம்மிடம் உள்ள விலையுயர்ந்த பொருட்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வது அவசியம். பொருட்கள் தவறும்பொழுது புகார் கொடுக்கவும், அடையாளம் காட்டவும் அது உதவியாக இருக்கும்.

விலையுயர்ந்த பொருட்களை வங்கி லாக்கரில் மட்டும் வையுங்கள்.

தனியாக இருக்கும் பெண்கள் அறிமுகமில்லாத நபர்களை உடன் யாராவது இருக்கும் சமயங்களில் மட்டும் வீட்டினுள் அனுமதிப்பது நல்லது.

வீட்டில் நிரந்தரமாக பணிபுரிபவர்களின் விலாசத்தை வாங்குவதோடு அவர்கள் இருக்கும் இடத்தையும் ஒருமுறை நேரில் சென்று பாருங்கள். அவர்களின் புகைப்படத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ப்ளாட்டுகளில் வசிப்பவர்கள் விசிட்டர்கள் ரெக்கார்ட்சை கண்டிப்பாக மெயிண்டெயின் பண்ண வேண்டும்.

அப்படியும் ஏதேனும் நடந்துவிட்டால் எதையும் கலைக்காமல் அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளவேண்டும்.

No comments: