செக்ஸ் கன்சுமரிசம்
சோசியலிசவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் வேசிகளுக்கு கட்சிகட்டுவதும் வேசி தொழிலை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என்றும் தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது புரியவில்லை. மும்பை சிவப்பு விளக்கு பகுதி, கோல்கத்தா சோனாகாச்சி எல்லாம் என்ன நிலையில் இருக்கிறது? அவர்கள் தொழிலையே அவர்களின் பிள்ளைகளும் தொடரவேண்டிய அவல நிலை, அந்த நிலை தமிழகத்திலும் வரவேண்டும் சோசியலிசம் என்ற பெயரில் கொண்டுவர வேண்டுமா? வேசி தொழில் செய்யும் அளவிற்கு தமிழகத்தில் அவல நிலையில்லை, இந்த வேசி தொழிலுக்கு பெண்களை தள்ளுவது மூலம் பெண்கள் மேலும் போக பொருளாக்கப்படும் அபாயம் இருக்கிறது, வேசியோடு புணரும் எவரும் மனதளவில் சாதியை தூக்கிபிடிப்பவராகத்தான் இருக்கின்றனர். பெண் உரிமை பேசும் சோசியலிஸ்டுகள் இப்படி ஒரு சதையை விற்று பிழைக்கும் தோழிலில் பெண்களை தள்ள நினைப்பது இவர்கள் பெண்களை அடிமைப்பிடியிலிருந்து மீட்க நினைக்கிறார்களா? இல்லை ஆண்களுக்கு ஏவல் செய்யும் சதைப்பொருளாக்க விரும்புகிறார்களா? பெண்களை இதே தொழிலை பயன்படுத்தி குண்டர்கள் கூட்டம் பணம் சேர்க்கும் அபாயம் மட்டுமின்றி, கொலை, கொள்ளை மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களும் நடைபெற வசதியாக அமையும். தற்போதும் இலைமறைவாக வேசித்தொழில் நடப்பதை மறுத்துவிடமுடியாது, இதை வைத்து காவல்துறை காசு பார்ப்பதும் உன்மையானாலும் இத்தொழில் நடப்பது மிகவும் குறைவே. ஆனால் இதை சட்டபபூர்வமாக ஆதரித்தால் மிக கேவலமான ஒரு தேசமாகத்தான் தமிழகம் உருவாகும்.
Wednesday, January 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment