Wednesday, January 2, 2008

புத்தாண்டு 2008 கொண்டாட்டங்கள்!

நாம் ஏற்கனவே சொன்னதுபோல் ஏதோ புத்தாண்டு என்பது வாழ்க்கையை தலைகீழாய் புரட்டிவிட்டது போல் ஒரேநாளில் ஆட்டம்போட அரைகுறை ஆடைகளை மாட்டிக்கொண்டு மது அருந்திவிட்டு ஆட்டம் போடுவது தான் புத்தாண்டை வரவேற்பதா? மும்பையில் தங்கள் ஆண் நண்பர்களுடன் ஹோட்டலில் நடணமாடிவிட்டு வந்த இரண்டு பெண்களை 70க்கும் மேற்பட்டவர்கள் மாணபங்கப்படுத்தியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் நம்மை வருத்தமடைய செய்கிறது. நாகரீக சமுதாயத்தில் ஒரு பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? பொருளாதார ரீதியாக முன்னேறியிருப்பதால் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பும் உரிமையும் கிடைத்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. இது எல்லா இடத்திலும் நடக்ககூடிய சாதாரன விசயம் இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் என மும்பை காவல்துறை ஆனையர் கேட்டிருப்பது காவல்துறையின் உயர் அதிகாரி எவ்வளவு பொருப்புடன் இருக்கிறார் என்று காட்டுகிறது. இவரே இப்படியிருந்தால் இவருக்கு கீழ் இயங்கும் மற்றவர்கள் எப்படியிருப்பார்கள்?
அடுத்தது கொச்சியில் சுவீடன் நாட்டு 15 வயது பெண்ணை தந்தையின் அருகிலேயே ஒரு 17 வயது பையன் மாணபங்கப்படுத்தியுள்ளான். இது இந்தியாவின் மாணத்தை ஏரோபிளேன் ஏற்றியிருக்கிறது. இந்தியர்கள் காமவெறியர்களா என்று தொலைகாட்சி நிறுவணம் ஆராய ஆரம்பித்துவிட்டது. இது போன்ற சம்பவங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் நிருபர்களின் ஒளிப்பதிவாகிவிட்டதால் இப்படி பெரிய விவகாரமாகிவிட்டது. இது போன்ற சம்பவங்கள் அன்றாடம் பேருந்தில், தொடர்வண்டியில், பொதுயிடங்களில், திரையறங்குகளில் என அரங்கேறிகொண்டிருக்கிறது. இவையெல்லாம் வெளியே சொன்னாலோ காவல் நிலையத்திற்கு போனாலோ அவமாணமென விட்டுவிடுகிறார்கள்.
படித்தவர்கள் இளைஞர்கள் நாளைய சமுதாயத்தின் ஆரோக்கியத்திற்காக உழைக்க போகிறவர்கள் என்று நாம் கருதுகின்ற மருத்துவ மாணவர்கள் இதைவிட கேவலம். பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மாணவிகளின் விடுதிக்குள் நுழைய முயன்று முடியாமல் போக நுழைவாயிலுள்ள நாற்காலிகளையும் சன்னல்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். பெண்கள் என்ன குத்தகை பொருளா? நாளந்தா மருத்துவமாணவர்கள் படிக்கபோனார்களா? பொறுக்க போனார்களா?
சென்னையிலோ புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொறியாளர் மரணம் தேவையா இதெல்லாம், மும்பையில் குடித்துவிட்டு வாகணம் ஓட்டி காவலர்களிடம் மாட்டியவர்கள் மட்டும் 1200 பேர் அதில் கைது செய்யப்பட்டவர்கள் 300 பேர். இவர்களிடம் வசூல் செய்யப்பட்ட மொத்த அபராததொகை 2 கோடி ரூபாய். என்ன நடக்கிறது இந்த நாட்டில்? குடிப்பது அவரவர் உரிமை என்று வைத்துக்கொண்டால் கூட குடித்துவிட்டு வாகணம் ஓட்ட யாருக்கு உரிமையிருக்கிறது?

No comments: