Thursday, January 3, 2008

கலைஞரின் நாட்டுடமை நாடகம்

திருவாத்தான்னு எங்க ஊருல ஒருத்தன் வந்து என்கிட்ட கலைஞர்னா என்னண்ணே ன்னு கேட்டான், சரி பையன் ஏதோ வெளங்காம கேட்குறான் நினைச்சுகிட்டு। கலைஞர்ன்னா நடிகர், கலைகூத்தாடி, கதாசிரியர் அப்படிபட்டவங்களை மரியாதையா சொல்ற பேருடா என்றேன். சரிண்ணே அப்ப புரட்சிகலைஞர் ன்னா என்னண்ணே என்றான். டே நடிப்புலையும் கதையிலையும் ஒரு புரட்சிகரமான கருத்த சொன்னா அவங்கள புரட்சிகலைஞர் சொல்லுவாங்கடா என்றேன். நம்ப விசியகாந்து மாதிரி இல்லண்ணே என்றான், எனக்கு வந்துச்சே கடுப்பு, ஒருமுறை முறைத்துவிட்டு சரி எதுக்குடா இதெல்லாம் கேட்குற என்றேன். இப்ப நம்ப கேப்டன் அண்ணன் பாகிஸ்தான் தீவிரவாதிங்கள தெரு தெருவா இழுத்துக்கிட்டு போனதால அவர புரட்சிகலைஞர் ன்னு சொல்றாங்க நம்ப முதலமைச்சர் கருணாநிதிக்கு கலைஞர் ன்னு ஒரு பட்டம் குடுத்துருக்குறாங்களே அது எதுக்கு என்றான். டே உங்க விசியகாந்து பாகிஸ்தான் தீவிரவாதிங்கள இழுத்துகிட்டு வந்தத நீ பார்த்தியா என்றேன். இல்லண்ணே சினிமாவுல காட்டுறங்களே என்றான். டே சினிமா வேற நிஜ வாழ்க்கைங்குறது வேறடா அதுமாதிரி எல்லாம் நடிகனுங்க பண்ணமாட்டாங்க நடிச்சுட்டு போயிறுவாங்கடா என்றேன். போங்கண்ணே நீங்க பொய் சொல்றீங்க என்றான். ஏண்டா என்றேன், நம்ப கலைஞர் நெசமாத்தான நாட்ட ஆள்றாரு இப்பகூட சிமெண்ட் விலைய குறைக்கலைன்னா நாட்டுடமை ஆக்கிடுவேன்னு மெரட்டி இருக்காரு என்றான். டே கலைஞர் நெசமான முதலமைச்சர் தாண்டா ஆனா நாட்டுடமைகளை அவர் தன்னோட உடமையா ஆக்கிகிட்டு இருக்குறாரோன்னு எனக்கு ஒரு டவுட்டு என்றேன். ஏன்ண்ணே அப்படி சொல்றீங்க என்றான். தம்பி ஏற்கனவே முரசொலி மாறன் இருந்தப்போ கலைஞர் குடும்பம் சிமெண்ட் ஆலைகளில் முதலீடு செய்து இருக்குறதால தான் சிமெண்டு தெரு போட்டாங்க சிமெண்ட் விலையையும் ஏத்திட்டாங்கன்னு ஒரு பேச்சு ஊருக்குள்ள. இப்ப நாட்டுடமை ஆக்குவேன்னு மிரட்டுறது நம்ப மு.க.ஸ்டாலின முதல்வராக்க ஒரு புரட்சி அரசாங்கமா காட்டுறாரு தோனுதுடா என்றேன். என்ண்ணே நம்ப பிடல் காஸ்ட்ரோ அமெரிக்க எண்ணை நிறுவணங்கள நாட்டுடமை ஆக்குன மாதிரி செய்யுவாரு நினைச்சேன் என்றான். நீ நெனச்சிக்கிட்டே இருடா கோவனங்கூட களவு போறது தெரியாம என்றேன். அய்யோ என்ண்ணே கலைஞர் நெசமாவே நடிக்கிறாரு ன்னு சொல்றீங்களா என்றான். அப்படித்தாண்டா அரசியல்வாதிங்க என்றேன். இப்ப புரியுதுண்ணே ஏன் நடிகருங்க எல்லாம் அரசியலுக்கு வராங்கன்னு என்றான். டே உன்க்குகூட கொஞ்சம் அறிவு இருக்குடா என்றேன். இல்லண்ணே நடிகருங்க அரசியலுக்கு வந்தா இன்னும் நல்லா நடிக்கலாம் இல்லண்ணே என்றான். அப்படியும் இருக்கலாம்டா என்றேன். சரிண்ணே இந்த Headlines Today ங்குற டி.வி கலைஞர் நாட்டுடமை ஆக்குவேன்னு சும்மா மசுல முறுக்குறாரு ஆனா அப்படியெல்லாம் பண்ணமுடியாதுன்னு வக்கீலுங்க சொல்றத கூட காட்டுனாங்குளே என்றான். டே திருவாத்தான் அதெல்லாம் இல்லடா பண்ணலாம் ஆனா பண்ணுவேன்னு சும்மா ஒரு ஸ்டண்டு விடுறாரு கலைஞரு. உண்மையா பண்ணினா நாட்டுல சமத்துவம் வந்துரும்டா அது அரசியல்வாதிகளுக்கு நல்லதில்ல என்றேன். டி.வி க்காரன் அப்படி காட்டுறதெல்லாம் இந்த வடநாட்டு மதவாதிங்கள சந்தோசபடுத்தரதுக்காக கூட இருக்கலாம் என்றேன். ஏன்ண்ணே அப்படியே கலைஞர் டி.வியையும் நாட்டுடமை ஆக்கிட்டாருன்னா நாமெல்லாம் ஓசில டி.வி பார்க்கலலம் இல்ல என்றான். டே என்றதும் சரிங்கண்ணே இப்ப புரியுது நான் போய் தண்ணிகட்டனும் ன்னு சொல்லிட்டு திருவாத்தான் ஓடிட்டான்.

No comments: