Thursday, January 3, 2008

சாமிகளும் சாமியார்களும்

செல்போன் சாமியார், பீர் சாமியார், சுருட்டு சாமியார், இதெல்லாம் தமிழ்நாட்டிலுள்ள சாமியார்களின் பெயர்கள். சாமிகளுக்கெல்லாம் பல கைகள் என்றால், சாமிகளுக்கெல்லாம் பல சமாச்சாரங்கள் ...ச்சீ சம்சாராங்கள் நல்லவர்கள் பெண் கேட்டாலே ஆயிரமுறை யோசிக்கும் நம் ஊரில் ஒரு டாக்டர் பெண்மணி ஒரு சுருட்டு சாமியாருக்கு மூன்றாவது மணைவியாகி இருப்பது தான் வேடிக்கை. மூன்றாம் தாரமாக ஒரு சாமியாருடன் வாழும் அளவிற்கு அந்த அம்மினிக்கு காதல் வந்திருக்கிறது என்றால் அவருக்கு சாமி மேல் பக்தியும், சாமியார் மேல் காதலும் வந்துள்ளது. ஆனால் அவரது காதலை காவல் நிலையத்தில் வைத்து முறித்துவிட்டார்கள். அது போக சன் தொலைகாட்சி காட்டிய முள் சாமியாரிகள் ஆட்டத்தை பார்த்தால் எனக்கே கடவுள் நம்பிக்கை வந்துவிடும் போல் இருக்கிறது. எப்படி தான் அந்த முள் மீது சாமியாரிகள் அமர்கிறார்களோ தெரியவில்லை. என் கவலையெல்லாம் அவர்களுக்கு எங்கெல்லாம் முள் குத்தும் என்பதல்ல, அப்படியென்ன முள் மேல் நின்று குறிசொல்லி நம்பிக்கை திரட்டுவது. என்ன கருமமோ, நான் ஆண்டவன பார்க்கனும் அவனுக்கு ஊத்தனும், அப்புறம் கேள்வி கேட்கனும்

No comments: