கருகலைப்பு சரியா? தவறா?
அமெரிக்காவில் குற்றவிகிதம் கூடிக்கொண்டே இருந்தது. கொள்ளைகள், வன்முறைகள், பாலியல் தொல்லைகள் பெருகிகொண்டே போயின. அடுத்த 25 ஆண்டுகளில் பெருகிபோகும் குற்றவிகிதம் குறித்து வெள்ளை மாளிகை கறுப்பாக கவலைப்பட்டது. ஆனால் அடுத்த 25 ஆண்டுகளில் நடந்ததே வேறு. குற்றவிகிதம் திடீரென்று குறையத் தொடங்கியது. ஆச்சரியத்தால் தலை பிய்த்துக்கொண்ட அரசு எப்படி என்று ஆராய்ந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நீதிமண்றத்தில் கல்யாணமாகாத ஒரு கர்ப்பிணி தொடுத்த வழக்குதான் குற்றங்கள் குறையக் காரணம் என்று கண்டுபிடித்தது. அதுவரை சட்டவிரோதமாக இருந்த கருகலைப்பைச் சட்டபூர்வமாக்கவேண்டும் என்று அவள் வழக்கு தொடுத்திருந்தாள். கருகலைப்பு சட்ட விரோதமல்ல என்ற அதிரடி தீர்ப்பை அமெரிக்க நீதிமண்றம் வழங்கியது. அதிலிருந்து 25 ஆண்டுகளில் குற்றவிகிதம் குறைந்துபோயிற்று. ஏனென்றால் சமூகத்தில் அழிம்பு செய்கிறவர்களில் பெரும்பாலோர் அனாதைப்பிள்ளைகள்; தாய் தந்தையரால் தூக்கி எறியப்பட்ட குப்பைத் தொட்டி குழந்தைகள். பரிவு, பாசம், கட்டுப்பாடு ஏதுமற்று மிருகங்களாய் வளர்ந்தவர்கள். கருகலைப்பு சட்டம் விரோதம் அல்ல என்று ஆன பிறகு, அவர்களின் பிறப்பு விகிதம் அற்றுப்போயிற்று; குற்ற விகிதம் குறைந்து போயிற்று. ஒரு குறிப்பிட்ட கோணத்தில் யோசித்துப் பார்த்தால், பக்க விளைவுகளற்ற கருகலைப்பு சட்ட விரோதம் அல்ல என்றே கருதவேண்டியுள்ளது.
Tuesday, January 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment