கிரிக்கெட் காமடியை பார்த்து எங்கே போய் அழுவது?
ஹர்பஜன் சிங்கை மீண்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டார்கள் என்பதற்காக பள்ளி மானவர்களை வைத்து ஏதோ ஒரு ஊரில் பேரணி நடத்தியிருக்கிறார்கள். பாவம் பள்ளிக்கு படிக்க வந்தால் பேரணிக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த ஹர்பஜன் சிங் மீண்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்ட பிறகு அவன் ஏற்கனவே இது போல் பலமுறை திட்டியிருக்கிறான் என்பது எனக்கு யாரும் சொல்லவில்லை என்கிறார் சர்வதேச கிர்க்கெட் கவுன்சிலின் நீதிபதி ஹன்சன். தெரிந்திருந்தால் தீர்ப்பு வேறு விதமாக இருந்திருக்கும் என்கிறார். ஹர்பஜன் சிங் தனது தாய் மொழியில் "தேரி மா கி" என்று திட்டியிருக்கிறான் அதை சைமண்ட்ஸ் "மங்கி" என்று புரிந்துகொண்டிருக்கிறான். இதை சச்சின் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் நீதிமண்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு நீதிபதி சொன்ன தீர்ப்பு என்ன தெரியுமா? இது ஒரு கெட்டவார்த்தை என்றாலும் இது 3.3 லெவலுக்கான குற்றமகாது என்றும் இது 2.8 லெவலுக்கான குற்றம் என்று கூறியிருக்கிறார்கள்
என்றால் தாய்க்கு என்ன மதிப்பு கொடுக்கிறார்கள் என்று பாருங்கள். "தேரி மா கி" என்றால் அவனுங்க அம்மாவ என்று அர்த்தம். அதாவது நம்ம தமிழில் "ஒங்கொம்மால" என்றும் "ஒங்கம்மாகிட்ட", "ஒங்கம்மாலோட", "ஒங்கம்மாலோடத" என்று பல பொருள்பட சைமண்ட்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களின் தாயை இழிவாக பேசியிருக்கிறான் என்பது எவ்வளவு கீழ்த்தரமான செயல்? கிரிக்கெட் ஆடுவது இவர்கள் இதற்கு எவருடைய தாயையும் பழிப்பது என்ன நியாயம்? இந்த வார்த்தையை ஹர்பஜனின் தாயரிடம் சொல்லி இப்படி பேசுவது குற்றமா இல்லையா என்று கேட்டால் என் மகன் குற்றவாளியல்ல என்று சொல்வாரா?
Thursday, January 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment