Tuesday, January 1, 2008

சன் டி.வியின் இந்துத்துவம்

தயாநிதி மாறன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் மாறன் சகோதரர்களுக்கு அரசியல் தயவில்லை, எனவே இவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளை அரவனைக்க தொடங்கியுள்ளனர், கூடவே திமுக விற்கு எதிராகவும், கலைஞர் தொலைக்காட்சிக்கு எதிராகவும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறார்கள். அதில் ஒன்றுதான் இந்துத்துவா, ஏற்கனவே விசயகாந்தையும், சரத்குமாரையும் ஆதரிக்க தொடங்கியவர்கள் இப்போது பார்ப்பன இந்துத்துவவாதிகளை தூக்கி நிறுத்துகின்றனர். சேதுசமுத்திர கால்வாய் திட்டத்திற்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிசத் தில்லியில் நடத்திய பேரணியை வானளாவ எடுத்துக்காட்டி ஏதோ பெரிய விசயமாக சன் செய்தியில் காட்டுகிறார்கள். வி.ஹச்.பி யின் பிரவின் தொக்காடியா பேசியதை முழுமையாகவே தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்தியாக காட்டிக்கொண்டிருக்கின்றனர். எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை பற்றி செய்திகளை போட்டு இல்லாத முக்கியத்துவத்தை ஏற்படுத்துகின்றனர். தீபாவளியை மக்கள் பொருளாதார இழப்பு என்று உணர்ந்து புறக்கணிக்க தொடங்கியதும், ஆங்கில புத்தாண்டை ஒரு விழாவாக்கி பெருமளவில் கல்லா கட்ட பார்க்கிறார்கள். இப்படி ஊரில் ஏதாவது ஆராவாரம் இருந்துகொண்டே இருந்தால் தான் செய்தி இருந்துகொண்டே இருக்கும். ஆராவாரமும் பொது விடுமுறையும் அதிகமாக இருந்தால் தான் மக்கள் அதிகமாக தொலைக்காட்சி முன்பு அமருவார்கள், அதிகமாக விளம்பரங்களை காட்டி, பெரும் கொள்ளையடிப்பது தான் இவர்களின் குறிக்கோள்

No comments: