Tuesday, January 1, 2008

பெண்ணியம்-பெண்ணுரிமை-பெண் விடுதலை

இந்த வார்த்தைகள் மார்க்சியத்தைவிட மிக அதிகமாக ஒலிக்கும் ஓசை. பெண் விடுதலையடைவது சாதி விடுதலையைவிட சிரமமானது என்பது பெரியாரின் கணிப்பு, ஏனெனில் பெண் வீட்டில் அடைக்கப்பட்டிருப்பதால். ஆனால், ஊடகம், மேநாட்டு மோகம் அல்லது ஏக்கம் என்பதெல்லாம் பெண்ணை வெளியுலகை கான வெளிக்கொணர்ந்துள்ளது. இன்றைய தாய்மார்கள் நான் தான் இப்படி வூட்டுக்குள்ளியே கெடந்துட்டேன் எம்புள்ளையாவது நாலு எடம் பார்க்குட்டும் என்று சொல்லி செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள். என் குழந்தைகளாவது படிச்சி முன்னுக்கு வரட்டும் என்று விவசாயிகள் பிள்ளைகளை படிக்க அனுப்பி என்னவாயிற்று இன்று விவசாய நிலங்கள் கேட்பாரின்றி கிடப்பது மட்டுமல்ல ஈட்டிய பணம் விளைநிலங்களில் மாட மாளிகை எழுப்பபட்டுவிட்டது. நான் விவசாயிகள் விவசாயம் தான் செய்யவேண்டுமென குலத்தொழில பார்க்க சொல்லவில்லை. இதற்கு என்ன தீர்வு என்பதே கேள்வி? இன்று பெண்கள் கணினி தொழில்நுட்ப துறையில் பல்வேறு காரண காரியங்களால் முன்னிலை பெற்றுள்ளனர், சமமான அறிவுள்ள ஆணும் பெண்ணும் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தால் பெண்ணுக்கே முன்னுரிமை. பெண்களுக்கு மட்டும் என்றே வேலைவாய்ப்பு முகாம்கள் நடக்கிறது. ஆனால் வேலைக்கு போகும் பெண்கள் என்ன புதுமைவாதிகளா, புரட்சிவாதிகளா? கிட்டதட்ட எல்லாம் பணப்பற்றாளர்கள் தான், ஐய்பதாயிரம் சம்பாதித்தால் 1,00,000 சம்பாதிக்கும் மாப்பிள்ளை வேண்டும் அல்லது அமெரிக்காவிலோ, லண்டனிலோ வேலை பார்க்கும் மாப்பிள்ளை வேண்டும். ஆணெண்ண பெண்ணென்ன? யார் தாய்நாட்டை விட்டு ஓடினாலும் துரோகி தானே. ஆனால் பெண்விடுதலை பெற்றுவிட்டதால் மட்டும் சமூக மாற்றம் என்பது கிடைத்துவிடவில்லை. ஏழை மக்களும், உழைப்பாளிகளுக்கும் உரிய நியாயம் கிடைக்கவேண்டும். முன்னேறிய பெண் வர்க்கம் தேடுவது சுகமும் பணமும் கூடிய குடும்ப விபச்சாரம் தான். உண்மை என்பதெல்லாம் முன்னேற்றத்தில் இல்லை. மணதில் இருக்கிறது. எனவே பெண்விடுதலையை விட இன்றைய தேவை, உழைப்பாளின் ஆட்சியை நிறுவுவது தான். சுகத்துக்காக அடுத்தவன் காலனியை நக்கிவிடும் இந்த உலகில் உழைப்பாளின் ஆட்சி நிறுவப்படவேண்டுமானால், மக்கள் மணதில் மாற்றம் வேண்டும்

No comments: