Wednesday, January 9, 2008

பெண்களுக்கு வேண்டும் விடுதலை வேட்கை

பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேறியிருக்கிறார்கள் ஆனால் அடிமை மனோபாவத்தில் மாற்றம் இருக்கிறதா? எத்தனை சம்பளம் வாங்கினாலும் தான் ஆணுக்கு பயன்படும் செக்ஸ் பொருள் என்ற மனப்பாண்மையும், தான் ஆணுக்கு அடிமை அல்லது ஆண்களைவிட கீழ்நிலையில் இருப்பவள் என்ற மனநிலையிலும் மாற்றம் இல்லை. இவர்கள் இன்றும் சுகவாழ்வு தேடும் பொம்மைகளாக இருக்கிறார்களே தவிர எத்தனை பெண்கள் உடலுழைப்பை அடிப்படையாக கொண்டு முன்னேற தயாராக இருக்கிறார்கள்? எவனாவது நல்ல சம்பளம் வாங்கினால் அவனிடம் அடைக்கலம் புகுந்து ஒரு செக்ஸ் ஏவலாகவும், துணி துவைக்கும் சலவை தொழிலாளியாகவும், ஒரு சமையல்காரியாகவும், வீட்டு வேலைக்காரியாகவும், பிள்ளை பெறும் மிஷினாகவுமே தங்களை நினைத்து திருமண உடன்பாட்டில் சாகும் வரை அடிமையாகவே இருக்கிறார்கள். மற்றபடி சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பில் இவர்களின் பங்கு என்ன? ஏதோ சில பெண்கள் எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் வேலை செய்தாலும் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். சில மேல்தட்டு பெண்கள் சாப்ட்வேர் கம்பெனிகளில் சொன்னதை செய்யும் ரோபோட்டுகளாக இருக்கிறார்கள் மற்றபடி இவர்களுக்கு எந்த சமுதாய சிந்தனையும் கிடையாது. இப்படி இருப்பதால் ஒரு புரட்சிகர சமுதாயத்தையும் உருவாக்கமுடியாது. பெண்கள் அனைத்து தடைகளையும் உடைத்து வெளியே வந்து புரட்சியை மேற்கொள்ளவேண்டும்.

No comments: